search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kangeyan"

    • தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் விழாவை மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.
    • கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    காங்கயம் :

    காங்கயத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் விழாவை மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார். காங்கயம், சிவன்மலை ஊராட்சி பகுதியில், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கயம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சிவன்மலை பகுதியில் புதிய தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கு இல்லம் தேடி சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    ×