என் மலர்
நீங்கள் தேடியது "Kanimozhi Karunanidhi"
- தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- பெரியாரின் கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம்.
தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், திராவிட இனத்தின் எரிதழலாய் - கொள்கைப் பேரொளியாய் - பகுத்தறிவுச் சுடராய் - ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் - சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
அவரது கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், சமத்துவ சமூகம் படைப்போம்.
திராவிட இனத்தின் எரிதழலாய் - கொள்கைப் பேரொளியாய் - பகுத்தறிவுச் சுடராய் - ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் - சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.அவரது கொள்கைத் தடியை… pic.twitter.com/hLINGsvhcu
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 24, 2024