என் மலர்
நீங்கள் தேடியது "Kanpur"
- மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர்.
- பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது.
நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, "இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக கொடுப்பதே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்று கூறி அந்த பகுதியில் உள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.
மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
- ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
- சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
- சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.
அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சனம்.
உத்தரகாண்ட் மாநிலம் கான்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன்.
இந்த தொகுதியில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய உமேஷ் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் அரசியல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
2 பேரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உமேஷ் குமார் எம்.எல். ஏ.வை ஒரு முறைகேடான குழந்தை என்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் விமர்சனம் செய்தார்.
இதனை கேட்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவருடைய ஆதரவாளருடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் அலுவலக த்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ரமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவா ளர்களை அவர்கள் தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சரவெடி போல தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகளில் இருந்து 100 குண்டுகள் பாய்ந்தன. அதில் 70 குண்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தனது ஆட்களுடன் வலம் வந்து அங்கிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சிகள் ஒரு சில நிமிடங்களில் அரங்கேறியது. இது பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆவேசமடைந்தார். அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டை நோக்கி நடந்து சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்பட 4 பேரை டேராடோனில் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக குன்வர்பிரணவ் சிங் சாம்பியன் கூறுகையில்:-
தன்னுடைய வீட்டின் முன்பு வந்து உமேஷ் குமார் எம்.எல்.ஏ. தனக்கு சவால் விட்டதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்து ள்ளார்.
உத்தரகாண்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

லக்னோவில் கோசைன் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது. ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சாந்தி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கணவரை சந்திக்க வரவில்லை. இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

நேற்று சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார். அவர்களது உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர். #Tamilnews