search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Coin"

    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
    • மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு நேப்பியர் பாலம் அருகில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தளத்தில் இறங்குகிறார்.

    அங்கு கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    கடலில் செல்லும் மீனவர்கள் படகுகளில் ஒரு டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அந்த டிரான்ஸ் மீட்டரில் இருக்கும் சிவப்பு பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை கிடைக்கும். உடனே உதவிக்கு கடலோர காவல் படையினர் செல்வார்கள்.


    இந்த அதிநவீன வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை நாளை முதல் செயல் பாட்டுக்கு வருகிறது. மேலும் புதுச்சேரி கடலோர காவல் படை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதையும் ராஜ் நாத்சிங் பார்வையிடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கை வரவேற்கிறார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு கண்காட்சியையும் பார்க்கிறார்.

    பின்னர் 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் ராஜ்நாத்சிங் நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

    • ரஜினி, கமல், திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
    • வருகிற 18-ந்தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

    அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார்.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது வீடு தேடி சென்று தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வு ரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

    இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×