என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerthy suresh"

    • நடிகை கீர்த்தி சுரேஷ் 'தசரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.


    ரகு தாத்தா

    தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'தசரா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


    ரகு தாத்தா படக்குழு

    'ரகு தாத்தா' படத்தின்  போஸ்டரை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் 'புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், படக்குழுவினருடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்து வரும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    தசரா போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், தசரா படத்தின் ஓடிடி உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ஓடிடி நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.


    ரிவால்வர் ரீட்டா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    • நடிகர் நானி தற்போது நடித்துள்ள திரைப்படம் தசரா.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    தசரா

    இந்நிலையில், 'தசரா' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்ற வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை நடிகர் நானி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தன்னுடைய பள்ளி தோழரை திருமணம் செய்யவுள்ளதாக வதந்தி பரவி வந்தது.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.


    கீர்த்தி சுரேஷ்

    இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளி தோழரை பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் நடைபெறவுள்ளதாகவும் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் பரவி வந்தது.


    மேனகா - கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில், இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் நடிகை மேனகா, "பரபரப்புக்காகக் கிளப்பி விடப்படும் செய்தி இது. இது மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.


    கீர்த்தி சுரேஷ்

    தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.


    • நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    நானி

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    கீர்த்தி சுரேஷ்

    இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழியை வைத்து இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அதே கோழியை தன் கையில் வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து என்னோடும் படத்தில் நடித்திருப்பதாக நானி பதிவிற்கு பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.




    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.


    ஆஸ்கர் மேடையில் சந்திரபோஸ் -எம்.எம்.கீரவாணி

    இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    கீர்த்தி பதிவு

    இந்நிலையில், 'தசரா' படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், " செட் அகற்றப்படுவதற்கு முன்பாக ஓடிச் சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.
    • டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்த சிவகார்த்திகயனின் வீடியோ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் சிவகா்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது  தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ் -சமந்தா பதிவு

    இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, "நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.


    திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருவதாகவும் அது விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    ×