என் மலர்
நீங்கள் தேடியது "Kerala State Lotteries"
- பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும். இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளில் வழங்கப்படும்.
மேலும் ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும். இதனால் கேரளாவில் பம்பர் பரிசு குலுக்கல் நடக்கும் போது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் பம்பர் குலுக்கல் லாட்டரிகளை வாங்குவார்கள்.
அவ்வாறு வாங்கிச் செல்பவர்கள் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (வயது37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடைக்குள் விவேக் ஷெட்டி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதியதில், விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.
கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் லாட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கிற்கு ஆர்த்தி என்ற மனைவியும், அன்வி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார்.
- பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் மேல்சாந்தியாக இருப்பவர் மதுசூதனன். இவர் அந்த கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை பூசாரியாக பணியாற்றி வருகிறார். பூசாரி மதுசூதனனுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு சிறிய தொகை பரிசாக விழுந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர், தான் வாங்கிய லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல்பரிசான ரூ.1கோடி விழுந்திருக்கிறது.
பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பான தெவ்வீக பணியின் ஆசீர்வாதத்தின் காரணமாகவே அவருக்கு லாட்டரியில் ரூ.1கோடி கிடைத்திருக்கிறது என்று அவர் பணிபுரியக்கூடிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுசூதனனுக்கு லாட்டரியில் ரூ.1கோடி விழுந்திருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அவருக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
- லாட்டரி சீட்டுகள் மூலம் கேரள அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
- கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு விற்பனையான லாட்டரி சீட்டுகள் மூலம் அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் ஆகவும், ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தம் 38,577 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள், கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.