என் மலர்
நீங்கள் தேடியது "KKRvRR"
- முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- டி காக் அதிரடியில் கொல்கத்தா 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ரன்னும், ரியான் பராக் 25 ரன்னும், சஞ்சு சாம்சன் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் ரகானே 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தது. டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டி காக் 97 ரன்னும், ரகுவன்ஷி 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
- சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
- 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.
தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.
அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நேரத்தில் ஷுப்மான் கில் 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்பு 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

தான் சிறப்பாக பந்து வீசியதற்கு ஷேன் வார்னே அங்கிருந்ததுதான் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன்னாள் விளையாடும்போது எப்போதுமே, மாறுபட்ட உத்வேகத்தை பெறுவேன். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன்.
போட்டிக்குப்பின் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கான என்னுடைய திட்டத்தை தொடங்கிவிட்டேன். இது அவருடன் சிறிய உரையாடல்தான். ஐபிஎல் தொடருக்குப் பின் ஒருவேளை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பை பெறலாம்’’ என்றார்.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஷிவம் மவி வீசினார். ராகுல் திரிபாதி எதிர்கொண்டார். திரிபாதி அடித்த பந்து ஸ்லிப் திசையை நோக்கி சென்றது. ஆனால் ராணா பந்தை பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து ராணா தப்பினார்.
2-வது ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி வீசினார். இதனால் 19 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 3-வது ஓவரை ஷிவம் வீசினார். இந்த ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசினார். இதனால் ராஜஸ்தானுக்கு 28 ரன்கள் கிடைத்தது. இதனால் 3 ஓவரில் 49 ரன்கள் குவித்தது. 3.2 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்னைத் தொட்டது.
5-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ராகுல் திரிபாதி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 4.5 ஓவரில் 63 ரன்கள் குவித்திருந்தது. 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இருந்து ராஜஸ்தானுக்கு சரிவு ஏற்பட்டது. இந்த ஓவரில் ரகானே ஆட்டமிழந்தார். 10-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார்.

பட்லர் ஆட்டமிழந்ததும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. சுனில் நரைன் சுஞ்சு சாம்சனை வீழ்த்த, குல்தீப் யாதவ் பென்ஸ் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரையும் வெளியேற்றினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் தாக்குப்பிடித்து விளையாடி 26 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
ஐந்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவிதி அந்த அணியிடம்தான் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ஜேக்யூஸ் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘எங்களுடைய தலைவிதி இன்னும் எங்கள் கையில்தான் உள்ளது. நாங்கள் இன்னும் இரண்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றால், எங்களால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
நாங்கள் தற்போது இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறோம். இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மற்ற அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை குறித்து நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.