என் மலர்
நீங்கள் தேடியது "Kotturpuram"
- கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
- படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.
சென்னை:
சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது.
கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கோட்டூர்புரம் பகுதிக்கு சென்றார். அங்கு மது குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். அவர்களிடம் விஷ்ணு தகராறில் ஈடுபட்டார். திடீரென்று அவர் ஒரு போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருபவர் யமஹா சீனு என்கிற சீனிவாசன்.
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான மோகன் ராமின் நெருங்கிய கூட்டாளியான இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன் ராஜை மும்பையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது தகவலின் பேரில் கடந்த 8-ந்தேதி சீனுவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இல்லை.
மோட்டார் சைக்கிளில் நடத்தப்பட்ட சோதனையில் 27துப்பாக்கி குண்டுகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
தப்பி ஓடி தலைமறைவான சீனுவை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சீனு போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். துப்பாக்கி குண்டுகளின் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஷிப்டுகளாக போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களாக இந்த ஷிப்டு முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே இருக்கிறது.
சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன், செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவில் சென்ற வெளிமாநில மாணவரை சரமாரியாக தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த மாணவர் நித்தீஷ். இவர் சென்னைக்கு சுற்றுலா வந்தார். மத்திய கைலாஷ் பகுதியில் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ள நித்திஷ் நேற்று இரவு அதே பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவை வழிமறித்து நித்திசை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார்.
அவரிடம் இருந்த நகை, செல்போன், பணம், லேப்டாப் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதனையடுத்து நித்திசை நடுரோட்டில் தூக்கி போட்டு விட்டு வழிப்பறி கும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றது. ஆட்டோ டிரைவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
அங்கு இருந்தவர்கள் நித்திசை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews