என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KT Rama Rao"

    • சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் 16 நாட்கள் மேசாமான இரவை சிறையில் கழித்தேன்- ரேவந்த் ரெட்டி.
    • நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள்- கேடி ராமராவ்.

    தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் ஒருவாரம் கழித்து அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான பிஆரஎஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராமராவ் சட்டசபையில் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் கொடுத்தார். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் ஜெயிலில் 16 நாள் கொடூரமான இரவை கழித்தேன் என ரேவந்த் ரெட்டி கடும் பதிலடி கொடுத்தார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    16 நாட்கள் நான் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டேன். அது பயங்கரவாதிகள் அடைக்கப்பட்ட சிறை. என்னை யாரையும் சந்திக்க அனுமிக்கவில்லை. அப்போதும் கூட என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்து மக்கள் நலனுக்காக பணியாற்றினே். என்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு சட்டத்தின்படி வெறும் 500 ரூபாய்தான் அபராதம்.

    நான் அடைக்கப்பட்ட சிறை அறையில் இரவு முழுவதம் லைட் எரிந்து கொண்டிருந்தது. மேலும் சுகாதாரமற்றதாக இருந்தது. தேவைப்பட்டால் எம்எல்ஏ-க்களை அழைத்துச் சென்று உண்மை நிலைமை காட்ட முடியும். சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அந்த துயரத்தில் இருந்து விலக மரத்தடியில் தூங்கினேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    இதற்கு கே.டி. ராமராவ், "நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள். யாராவது ஒருவர் உங்களுடைய ஜூப்ளி ஹில்ஸ் பேலஸ் மீது டிரோன் பறக்கவிட்டு, உங்களுடைய மனைவி அல்லது குழைந்தைகள் படதெ்தை எடுத்தால், அமைதியாக இருப்கீர்களா?. உங்கள் குடும்பத்தைப் பற்றி வரும்போது நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள்.

    பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவாரம் வரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த ரேவந்த் ரெட்டி "எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தினால் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியும்" என்றார்.

    சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது கே.டி. ராமராவ் வீட்டின் மேல் டிரோன் பறக்கவிட்டு படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
    • இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ்இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

    * இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    * கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    * தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.

    * உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு

    * இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    என்று கூறினார். 

    • கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
    • 3-வது அணியே இப்போது தேவை.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது.
    • கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம்.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அரசியலுக்கான என் பெயரை இழுக்க வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமந்தா கூறியிருப்பதாவது:-

    எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்.

    என சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நாகர்ஜுனா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

    தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
    • தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசு தெலுங்கானாவுக்கு சாபம் ஆகிவிட்டது.

    போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டவும், மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை கேட்பதற்காகவும் தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

    • பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.
    • எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.

    பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியிருந்தது.

    அதன்படி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். இன்று காலை 10.40 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற கே.டி. ராமராவிடம் அதிகாரிகள் சுமார் ஏழு மணி நேரம் கேள்விகள் கேட்டனர்.

    விசாரணை முடிந்த நிலையில் கே.டி. ராமராவ் கூறியதாவது:-

    நான் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குகிறேன். நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ, அப்போது தேதியையும், இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் இடத்திற்கு நான் வருகிறேன். இருவரும் சேர்ந்து இருப்போம். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார். நீங்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு போக வேண்டும்.

    நீதிபதி முன் அமர்வோம். ஏசிபி நீதிபதி அல்லது உயர்நீதிமன்றம் நீதிபதி, ஏன் ஓய்வு பெற்ற நீதிபதியாக கூட இருக்கலாம். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும். ஒட்டுமொத்த தெலுங்கானாவும் பார்க்க வேண்டும். அதன்பின் யார் உண்மை சொல்கிறார்கள். பொய் சொல்கிறார்கன் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

    ரேவந்த் ரெட்டி ஏசிபி மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர். இதனால் நானும் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார். பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. பண மோசடியும் நடைபெறவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ரேவந்த் ரெட்டியுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்கார தயாராக இருக்கிறேன். எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.

    இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

    • நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
    • தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.


    எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.

    மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.

    அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
    ×