என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "live broadcast"

    • திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு.

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று சம்மதம் தெரிவித்துள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
    புதுடெல்லி:

    வழக்கு விசாரணைகளில் ஒளிவு, மறைவற்ற தன்மைக்காக நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

    குறிப்பாக, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைகளை நேரடியாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பவும் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவரான சுவப்னில் திரிபாதி என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  

    நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதை ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்புவது தொடர்பாக தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் பரிந்துரைக்குமாறு மத்திய அரசையும், வழக்கு தொடர்ந்தவரையும் அறிவுறுத்தியுள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
    தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்ற அவைகளின் நிகழ்வுகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற நிகழ்வுகளையும், நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள், விவாதங்கள் போன்றவை பொதுமக்களுக்கு தெரியவரும்.

    அதேவேளை எதிர்க்கட்சிகளின் அமளிகள், அவசியமற்ற வெளி நடப்புகள் போன்றவையும் வெளிச்சத்திற்கு வரும். தங்களுடைய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பேரவை செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும். எனவே பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியதுபோல், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூத்த உறுப்பினர் இருக்கும்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த போபையாவை நியமித்ததற்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது.

    போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு மனு தாக்கல் செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    அதன்படி போபையா நியமனத்திற்கு எதிரான மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதில் மரபு மீறப்பட்டுள்ளதாகவும் அவர்போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்காலிக சபாநாயகராக போபையா நீடிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.



    மூத்த எம்எல்ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்? என நீதிபதி பாப்தே கேள்வி எழுப்பினார்.  அதேசமயம் போபையா இல்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யார் கண்காணிப்பார்கள்? வாக்கெடுப்பை ஒத்திவைக்க நேரிடும். சபை நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறுதற்கு சிறந்த வழி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை நேரலை செய்வதுதான் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து தீர்ப்பு அளித்த நீதிபதிகள், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்துசெய்ய மறுத்துவிட்டனர். அதேசமயம், சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    ×