என் மலர்
நீங்கள் தேடியது "live telecast"
- கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
- ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்த்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
- இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணை முதல் முறையாக இணையதளத்தில் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் குற்றங்கள் மற்றும் திருமணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை தவிர சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை களை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கியது.
ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி ஒளிபரப்பு நடைமுறை உடனே கொண்டு வரப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.
www.webcast.gov.in/events/MTc5mg-- என்ற இணைய தளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப் படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி அவரது அமர்வின் விசாரணை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வழக்கு, பெகாசஸ் உள்பட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இந்தியா முழுவதும் இன்று(வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று இரவு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஏராளமானோர் வந்து படம் பார்த்தார்கள். படம் பற்றிய விமர்சனங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டபடி இருந்தனர்.
காலா படம் பற்றிய தகவல்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் டெரிண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் இருந்து காலா படம் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் ஓரமாக உட்கார்ந்து படத்தை பேஸ்புக்கில் அப்படியே நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார். 40 நிமிடங்கள் காலா படக்காட்சிகள் பேஸ்புக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இது திரை உலகினரையும், ரஜினி ரசிகர்களையும் அதிர்ச்சி ஆக்கியது.
இது பற்றி சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரவீன் என்பது தெரிய வந்தது. பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பி கைதானவர் பற்றிய தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.