என் மலர்
நீங்கள் தேடியது "local train"
- காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் ரெயிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
- அப்போது சக பயணிகளுடன் கலந்துரையாடிய அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
மும்பை:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் இன்று பயணம் செய்தார். அப்போது மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
சக பயணிகளுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சக பயணிகள் போல் நிதி மந்திரி பயணம் செய்ததை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் ஒவ்வொரு நாளும் 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
Smt @nsitharaman interacts with commuters while travelling from Ghatkopar to Kalyan in a Mumbai local train. pic.twitter.com/T15BdC3f5V
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 24, 2024
- சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரெயிலில் நடந்துள்ளது
- மாலை 4:11 மணிக்கு ரெயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தது
மும்பை புறநகர் ரெயிலின் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக தோன்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த திங்கள்கிழமை சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரெயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாண ஆண் ஒருவர் உள்ளே வந்து நின்றதால் பெண்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பயணி ஒருவர் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. மாலை 4:11 மணிக்கு ரெயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தபோது, பெண்கள் கோச்சின் கதவு அருகே அந்த நபர் ஏறி நின்றார்.
பெண் பயணிகளின் கூச்சலை தொடந்து பக்கத்து பெட்டியில் இருந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் விரைந்து வந்து அந்த நபரை வெளியேறினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ரெயில்வே போலீஸ் அந்த ஆசாமியை தேடி வருகிறது.
மும்பையில், மின்சார ரெயில்கள் புறப்பட்ட பின்னர் ஏற முயன்று பிளாட்பார இடைவெளியில் தண்டவாளத்தில் விழுந்து பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க மத்திய ரெயில்வே, மின்சார ரெயில் பெட்டிகளின் வாசற்படிகளின் மேல், ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது.
சோதனை முயற்சியாக ஒரு மின்சார ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் பிளாட்பாரத்தில் நின்றுவிட்டு கிளம்பியதும், இனி ஏறக்கூடாது என பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்த விளக்கு எரியும்.
இது தொடர்பாக பயணிகளின் கருத்துகளை கேட்ட பின்னர் அனைத்து ரெயில்களிலும் இந்த விளக்குகளை பொருத்த வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய ரெயில்வே கூறியுள்ளது. இந்த திட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று சில பயணிகள் தெரிவித்தனர்.