என் மலர்
நீங்கள் தேடியது "look out notice"
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் புகாரில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ், எந்த பகுதியில் பதுங்கி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன் அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபர் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பிடிபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸ் நிலைய எண், அதிகாரிகளின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே மதபோதகர் கண்டிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது. அத்துடன் அவரை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.
மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து மட்டும் 150-க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகளை முறைப்படி வாங்கியதாக ஏற்கனவே ரன்வீர் ஷா ஆதாரங்கள் சமர்ப்பித்து இருந்தாலும், அவை முறையாக இல்லாததால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரன்வீர் ஷாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது.
அனைத்து விமான நிலையங்களுக்கும் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் மூலம், ரன்வீர் ஷா சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது தடுக்கப்பட்டுள்ளது. #Idols #RanveerShah