என் மலர்
நீங்கள் தேடியது "Lord Pope"
- 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
- முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.
ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
- தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு (வயது 88) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிசுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சுவாசக்குழாய் தொற்றுக்கான சிகிச்சையை டாக்டர்கள் மாற்றியுள்ளனர், தேவைப்படும் வரை போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் இருப்பார். அவருக்கு காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது. அவர் சில வேலைகளைச் செய்தார். பத்திரிகைகளைப் படித்தார்" என்று தெரிவித்துள்ளது.