என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Luxury Car"

    • ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
    • லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்

    ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.

    இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    • மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது.
    • இந்த காரில் 6.75 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கலினன் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்குகிறது. இதே காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ. 12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

     


    கலினன் சீரிஸ் II மாடலில் மெல்லிய ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் புதிய தோற்றம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. இந்த காரின் சக்கரங்களும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதே எஞ்சின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    சென்னையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரி, மோசடி பணத்தில் சொகுசு கார், படகு, பங்களா வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. #BankOfficer #CheatingCase
    சென்னை:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். முன்னாள் தனியார் வங்கி அதிகாரி. இவர் மீது நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெபரத்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்தார்.

    அதில், “கமலக்கண்ணன் என்னிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவரை நம்பினேன். ஆனால் கமலக்கண்ணன், எனது பெயரில் பலகோடி மதிப்பில் நிலங்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 3 வங்கிகளில் கொடுத்து ரூ.1.83 கோடி கடன் வாங்கி உள்ளார். அந்த வங்கியில் இருந்து எனக்கு நோட்டீசு வந்த பிறகுதான் கமலகண்ணன் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் வங்கி அதிகாரியான கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் தொழிலுக்காக கடன் வாங்கி தருவதாகவும், கார் கடன் வாங்கி தருவதாகவும் மோசடி செய்து வந்ததும், மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    கொடைக்கானலில் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள பங்களா வீடு வாங்கி உள்ளார். 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் உல்லாச படகு ஒன்றையும் வாங்கி அந்தமான் தீவில் நிறுத்தி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் கமலக் கண்ணன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரூ.6.71 கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தற்போது முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் சிக்கி உள்ளார். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலகண்ணனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது. #BankOfficer #CheatingCase
    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz


    இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துகிறது.

    நிர்வாக கட்டண செலவீனங்கள் அதிகரித்திருப்பதே திடீர் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து சதவிகிதம் வரை குறைந்திருப்பதும், ரெபோ கட்டணம் கடந்த சில மாதங்களில் 0.5 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    இவை அனைத்தும் மெர்சிடிஸ் இந்தியா தனது வாகனங்களின் விலையை உயர்த்த காரணமாக தெரிவித்துள்ளது. 

    செலவீன கட்டணங்கள் விலை உயர்வு மற்றும் ஃபோரெக்ஸ் கட்டணங்கள் எதிர்பார்த்தபடி இல்லாதது போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என மெர்சிடிஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரோலாண்ட் ஃபோல்ஜர் தெரிவித்தார்.

    இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் எங்களுக்கு குறைவான நடவடிக்கைகளில் நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாடல்களின் விலை மாற்றம் செய்வதே தீர்வாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆடி நிறுவனத்தின் கியூ8 எஸ்யுவி மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஆடி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஆடி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. ஆடி கியூ5 புதிய டீசர் இரண்டு வரைப்படங்களில் மாடலின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான ஸ்பை தகவல்களில் இடம்பெறவில்லை.

    புதிய வரைப்படங்களில் ஆடி கியூ8 முன்புறமும், பின்புறமும் காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் ஹூட் கிரீஸ் மற்றும் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களும் பின்புறம் ஹேட்ச் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    கிரீஸ் செய்யப்பட்ட ஃபென்டர்கள் சக்கரங்களின் மேல் வழங்கப்பட்டிருப்பதோடு புதிய டிரேப்சாய்ட எக்சாஸ்ட் காரின் தோற்றத்தை மாற்றுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் கியூ சீரிஸ் மாடல்களை போன்று இல்லாமல் புதிய ஆடி கியூ8 வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது.

    புதிய ஆடி கியூ8 ஆடம்பர கூப் மற்றும் ஸ்போர்ட் கூப் மாடல்களை சேர்த்ததாக இருக்கும். ஆடி கியூ8 மாடல் 2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
    இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் புதிய மைல்கல் படைத்திருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் இந்திய சந்தைக்கான 1,00,000 யூனிட் தயாரித்திருக்கிறது. இ-கிளாஸ் செடான் மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 1,00,000 யூனிட்டாக வெளியிடப்பட்டுள்ளது. 

    மெர்சிடிஸ் நிறுவன தலைவர், தலைமை செயல் அதிகாரியான ரோலன்டு ஃபோல்கர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன செயல் இயக்குனர் பியூஷ் அரோரா தயாரிப்பு ஆலையில் இருந்து 100,000 யூனிட் இ-கிளாஸ் செடானை வெளியிட்டனர்.

    இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு 1,00,000 யூனிட் வெளியீடு மிகச்சிறந்த உதாரணம் ஆகும் என ரோலன்ட் ஃபோல்கர் தெரிவித்தார். 



    மேலும் 1,00,000 யூனிட் முந்தைய மற்றும் தற்போதைய மெர்சிடிஸ் இந்தியா ஊழியர்களின் அயராத உழைப்புக்கான ஊதியம் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் மெர்சிடிஸ் தயாரிப்புகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து பார்க்கும் போது அடுத்த மைல்கல் சாதனையை மிக விரைவில் எட்டுவோம் என அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் 1,00,000 யூனிட் வெளியாகி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தை பரைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. என பியூஷ் அரோரா தெரிவித்துள்ளார். எவ்வித தயாரிப்பு இலக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மேலும் எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
    ×