search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahadev Betting App"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
    • தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை அமலாக்கத்துறை வலை வீசி தேடி வந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

    இந்தியாவின் வட மாநிலங்களில் இதில் பெட் கட்டிய லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். சுமார் ரூ.5000 கோடி வரை இந்த செயலி மூலம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து இன்று [அக்டோபர் 11] இன்டர்போல் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்னும் ஒரு வாரத்துக்குள் சந்திரசேகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
    • சவுரப் சந்திரகர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர்.

    இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏராள மான இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் சூதாட்ட செயலி வாயிலாக ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


    மேலும் சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக மும்பையில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ரூ.508 கோடி வரை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் வழக்குகள் தொடர்பாக சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

    இதைத்தொடர்ந்து சூதாட்ட செயலியின் மற்றொரு உரிமையாளரான ரவிஉப்பலை பிடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதை தொடர்ந்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரவிஉப்பல் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்டர்போல் மூலம் அமலாக்கத்துறை வழங்கிய ரெட்கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் துபாயில் உள்ளூர் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மஹாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சவுரப் சந்திரகர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்றது.
    • சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    துபாயை மையமாக கொண்டு இயங்கும் மஹா தேவ் சூதாட்ட செயலியின் தலைவர் சவுரப் சந்திரகர் மற்றும் அவரது கூட்டாளி ரவிஉப்பல் ஆகியோர் மீது ரூ.5 ஆயிரம் கோடி வரை பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் மீதான பண மோசடி புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மஹாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சவுரப் சந்திரகர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்றது. இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு ரூ.200 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    இந்த புகார் தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரகர் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகர்களை அழைத்து சென்ற பிரபல மேலாளர்களின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    டெல்லி மற்றும் மும்பையில் ஒரு சில மேலாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.2½ கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×