என் மலர்
நீங்கள் தேடியது "Maharastra"
- இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
- பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.
- நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்.
- அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹஸ்டிங்ஸில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டார். நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆதித்யநாத், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி- மகாராஷ்டிராவை "லவ் ஜிகாத் மற்றும் லேண்ட் ஜிஹாத் தளமாக" மாற்றுவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் பிரிந்ததால், இந்த நாடு பிளவுபட்டது, இந்துக்கள் பிரிந்ததால் கொல்லப்பட்டார்கள். அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிந்துவிடாதீர்கள். நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்."
"அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. அது இறுதியாக 2019 இல் மோடியின் தலைமையில் தான் தீர்க்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் அமராவதியில் தவறு செய்யாதீர்கள், மீண்டும் பிரிந்தால், விநாயகப் பெருமானுக்கு பூஜை போடப்பட்டு, லவ், லேண்ட் ஜிகாத் என்ற பெயரில், இங்குள்ள நிலங்கள் கைப்பற்றப்படும்."
"மகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள், ஏழைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றத் துணிந்தவர்களின் டிக்கெட்டை எமராஜா ரத்து செய்திடுவார்," என்று தெரிவித்தார்.
