என் மலர்
நீங்கள் தேடியது "Mahela Jayawardene"
- பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
- இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.
2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.
அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது
என்று அவர் கூறினார்.
- 2017 முதல் 2022 வரை மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே பணியாற்றியுள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் பணியாற்றி வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே பணியாற்றியுள்ளார். மும்பை அணி 3 சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது
கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியின் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் பணியாற்றி வந்தார். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தை தான் மும்பை அணி பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.
- விராட் கோலி மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.
துபாய்:
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை.
3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
33 வயதான விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இதுவரை சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. மோசமான 'பார்ம்' காரணமாக இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியின் அடிப்படையில் தான் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.
இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி தற்போது எதிர் கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் தரமான ஆட்டக்காரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.
கடந்த காலங்களில் அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். அதே போல விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.
இவ்வாறு ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
விராட் கோலி சர்வதேச போட்டியில் மொத்தம் 23, 726 ரன்கள் (டெஸ்ட் 8074, ஒரு நாள் ஆட்டம் 12,344, 20 ஓவர் போட்டி 3308) எடுத்துள்ளார். 70 சதங்களை (டெஸ்ட் 27+ ஒருநாள் போட்டி 43) அடித்துள்ளார்.
இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘இந்திய ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெளிப்பாடு கேப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட ஏராளமான போட்டிகள் மிகவும் நெருக்கமாக வந்து பரபரப்பு ஏற்படுத்தின.
வங்காள தேச அணி தமிம் இக்பால் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் வங்காள தேசத்திற்கு தலை நிமிர்ந்து செல்ல முடியும். எனினும், நல்ல தொடக்க கிடைத்தும் வெற்றி பெற முடியாமல் போனதே என்ற பெரிய ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கும்.

வங்காள தேசம் 260 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய கம்பினேசன்களை இந்த தொடர் செய்து பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி ’’ என்றார்.
