என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"

    • இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
    • இவருக்கு அளித்த பாதுகாப்புப் படை எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்தது இலங்கை அரசு.

    கொழும்பு:

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.

    மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை 350-ல் இருந்து 60 ஆகக் குறைத்து இலங்கை அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

    இதை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ச மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது.
    • கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.

    கொழும்பு :

    இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர்.

    இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்தபோது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கான செலவினங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் தற்போது வெளியிட்டு உள்ளன. அதாவது இருவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் வங்காளதேசம், இத்தாலிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது. இதைப்போல நியூயார்க், கிளாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரக பயணத்துக்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.

    நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டு இருப்பது இலங்கை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
    • மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது.

    இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.

    அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.

    • 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவளர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட், ராஜபக்சே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

    ராஜபக்சேவின் சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. அத்துடன் 4 அரசியல் தலைவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை அவர்களிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. 

    • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.

    இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.

    இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.

    ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது.
    • தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.

    இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யோஷித ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.
    • குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் குற்றச்சாட்டு தொடர்பாக யோஷித ராஜபக்சே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

    இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. பிரதமராகவும் இருந்துள்ளார். இவருக்கு நமல், ரோஹிதா, யோஷிதா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யோஷித ராஜபக்சேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவரை சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெலியத்த என்ற பகுதியில் வைத்து யோஷிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் புத்திக மனதுங்க கூறும்போது, "சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்சே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார். ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சொத்து விவரங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே இருந்தபோது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர்கள் பதவியில் இருந்து விலகினார்கள். அதன்பின் இடைக்கால அரசு அமைந்தது.

    பின்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் திசாநாயகே அபார வெற்றி பெற்று பதவியேற்றார்.

    தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீதான செல்வாக்கு மோசமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொழும்பு:

    இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனால் சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த அவர், வெளியே தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
    இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவு பத்திரிகையில் வெளியான தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராஜினாமா செய்தவுடன், மகிந்த ராஜபக்சே, முகமது நஷீத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இலங்கையில் சுமூகநிலை திரும்பும்வரை மாலத்தீவில், தானும், தன் குடும்பமும் தஞ்சம் அடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தங்கி இருக்க ராஜபக்சே விருப்பம் தெரிவித்தார்.

    அதை நிராகரித்த முகமது நஷீத், மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு கூறினார். பின்னர், முகமது நஷீத், இலங்கைக்கு சென்றார்.

    கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சே, குடும்பத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

    இத்தகவல்களை மாலத்தீவு அரசு உயர் அதிகாரி ஒருவர் சொன்னதாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
    மகிந்த ராஜபக்சே, தனக்கும் தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
    கொழும்பு :

    இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

    ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது' என்று கூறினார்.

    இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.
    இலங்கையில் நடந்த வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இலங்கை பிரதமர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அரசு வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

    இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இலங்கையில் நடந்த வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகுமாறு பதவி விலகிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு நேற்று மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    மனித உரிமை ஆணையக்குழு

    இதுபோல முன்னாள் அமைச்சர்கள் நமல் ராஜபக்சே, ரோகிதா அபே குணவர்த்தனா, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும் ஆணையத்தின் முன்பு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் வருகிற புதன்கிழமை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டு உள்ளது.

    • மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது.
    • தடை உத்தரவு செப்டம்பர் 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு :

    இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

    கடந்த மாதம் 15-ந் தேதி, இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28-ந் தேதிவரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2-ந் தேதிவரையும், 11-ந் தேதிவரையும் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.

    • கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது விசாரணை நடந்து வருகிறது.
    • நாட்டைவிட்டு வெளியேற தடை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிப்பு.

    கொழும்பு :

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×