என் மலர்tooltip icon

    இலங்கை

    • தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
    • மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

    அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

    நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

    • இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
    • இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது.

    கொழும்பு:

    இலங்கை அதிபர் அனுரா திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 5-ந்தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அனுரா திசநாயகே தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறும்போது, இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மகிந்த ஜெயதிஸ்ச கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.

    இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகா வாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார வாரியம், இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.

    • இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
    • இவருக்கு அளித்த பாதுகாப்புப் படை எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்தது இலங்கை அரசு.

    கொழும்பு:

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.

    மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை 350-ல் இருந்து 60 ஆகக் குறைத்து இலங்கை அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

    இதை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ச மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.

    கொழும்பு:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

    எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:

    சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.

    அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.

    அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.

    தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
    • சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.

    சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    • இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம்.
    • வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    கொழும்பு:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

    வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்தார்.

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.
    • இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நிலையில், தற்போது 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளது.

    சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு பின் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 5ம் தேதி வரை சிறை காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்தது.
    • இதையடுத்து நேற்று நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது என்றனர் அதிகாரிகள்.

    கொழும்பு:

    இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்ததை அடுத்து நேற்று நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கிய மின்தடை 3 மணி நேரத்துக்குப் பின்னரும் சீராகவில்லை.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தித்துறை மந்திரி, கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்சனையால் நாடுமுழுதும் மின் தடை ஏற்பட்டது. மின்சார தடைக்கு பானாந்துறை மின்நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம். சில பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் பல இடங்களில் மின்தடை நீடித்தது. விரைவில் மின்விநியோகம் சீராகும் என தெரிவித்தார்.

    குரங்கு செய்த சேட்டையால் இலங்கையில் மின்தடை ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
    • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

    156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • ஸ்மித் (131), அலெக்ஸ் கேரி (156) சதம் விளாசல்.
    • இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று முன்தினம் காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமான், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 120 ரன்களுடனம், கேரி 139 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் மளமளவென சரிய 414 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான நிஷாங்கா 8 ரன்னிலும், கருணாரத்னே 14 ரன்னிலும், சண்டிமல் 12 ரன்னிலும் வெளியேறினார்.

    ஆனால் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 72 ரன்களுடனும், மெண்டிஸ் 35 ரன்களுடனும் விளையாடி வருகிறது.

    ×