என் மலர்
நீங்கள் தேடியது "Makkal"
ஈரோடு, மே. 15-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.
மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.
அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.