search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkal needhi maiam members"

    கோவை அருகே கண்டெய்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். #MakkalNeedhiMaiam
    கோவை:

    கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கண்டெய்னரில் பண்டல், பண்டலாக பணம் கொண்டு செல்லப்பவடுதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கண்டெய்னர் லாரி கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று கலெக்டர் ராஜா மணி முன்னிலையில் கண்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்த போது, அதில் டீத்தூள் பண்டல்கள் மட்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கண்டெய்னரில் இருந்த டீத்தூள் பண்டல்களை வேறு லாரியில் ஏற்றி அனுப்பினர்.

    இதற்கிடையே லாரி டிரைவரான பிரகாஷ்(36) குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முகமது சாஜித் மற்றும் அவருக்கு துணையாக வந்தவர்கள் லாரியை சிறை பிடித்து, சேதப்படுத்தியதோடு, தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

    புகாரின்பேரில் முகமது சாஜித் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பெரோஸ்கான்(22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தடுத்து நிறுத்துதல், தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சொத்துக்களை சேதப்படுத் துதல் உள்ளிட்ட 6 பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோவை ஜே.எம்.7 மாஜிஸ் திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் தி.மு.க. நிர்வாகிகள் குறிச்சி பிரபாகரன், இளைஞர் அணியை சேர்ந்த கோட்டை அப்பாஸ் மற்றும் மசூத், யாசர், வானவில் கனகராஜ், புவனேஸ்வரன், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், ரமணி, கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MakkalNeedhiMaiam
    ×