என் மலர்
நீங்கள் தேடியது "Mammootty"
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.
- அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- தெலுங்கில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து நடித்துள்ள 'JACK ' படமும் ரிலீஸ் ஆகிறது.
திரையரங்கில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. ஆனால் இந்த வாரம் தமிழ் சினிமாவில் தனியாளாக களமிறங்குகிறது அஜித்தின் குட் பேட் அக்லி படம்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஜித், தமிழின் உச்ச நட்சத்திரம் என்பதால் பெரும்பாலான திரையரங்குகள் நாளை (ஏப்ரல் 10) ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வாரம் தமிழில் வேறெந்த குறிப்பிடத்தகுந்த படங்களும் வெளியாகவில்லை.
ஆனால் மற்ற மொழி படங்கள் பலவும் இந்த வாரம் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அந்த வரிசையில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடித்த 'பசூக்கா' திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) வெளியாகிறது. இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்துடன் பசூக்கா அமைந்துள்ளது.
மேலும் பசில் ஜோசப் நடித்த 'மரணமாஸ்' நாளை வெளியாகிறது. பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் மரண மாஸ் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதுதவிர காலித் ரஹ்மான் இயக்கிய 'ஆலப்புழா ஜிம்கானா' நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தியில் சன்னி தியோல் நடித்துள்ள 'Jaat' திரைப்படமும், தெலுங்கில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து, பிரகாஸ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'JACK ' என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.
- இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
- முதல் பாடலான லோடிங் பாசூக்கா பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. முதல் பாடலான லோடிங் பாசூக்கா பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசரை இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது.
- இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது.
கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு U/A 13+ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் பொருள் படம் திரையிட தகுதியானது, ஆனால் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இப்படத்தை காட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
- நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
எம்புரான் படம் வெற்றி பெறவேண்டி சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மம்முட்டிக்காக மோகன்லால் வழிபடு நடத்தியது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் பாராட்டினார்.
அதே சமயம் மம்முட்டி ஒரு முஸ்லிம் என்றும் இந்து முறைப்படி அவருக்கு பிரார்த்தனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று மற்றொரு தரப்பினர் இதற்கு தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மோகன்லாலிடம் மம்முட்டி கூறியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று 'மத்யமம்' செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
- நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல் தி கோர்
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

படப்பிடிப்பில் இணைந்த ஜோதிகா
இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஜோதிகா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Our Leading lady #Jyotika has joined the sets of @KaathalTheCore
— MammoottyKampany (@MKampanyOffl) October 27, 2022
Can't wait to see the magic unfold 😊@mammukka @MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl #Mammootty #Jyothika #MammoottyKampany pic.twitter.com/iqALhFhs16
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.
- இவர் தற்போது இந்தியில் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், 'விடுதலை', 'மும்பைக்கார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்
இந்நிலையில், விஜய் சேதுபதி மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி
மேலும், இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மலையாள நடிகர் மம்முட்டி தற்போது 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல் தி கோர்
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.

சூர்யா-மம்முட்டி-ஜோதிகா
இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Happy to have hosted Dear @Suriya_offl at the location of @KaathalTheCore 😊 pic.twitter.com/2vs5u2ROlg
— Mammootty (@mammukka) November 9, 2022
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.
- இவருடைய தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை காலமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மம்முட்டி - பாத்திமா இஸ்மாயில்
நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 93 வயதாகும் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி.
- இவர் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (99) வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மம்முட்டி -பாத்திமா இஸ்மாயில்
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டியின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Dear friend @mammukka ,
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2023
Heard of your mother's demise. You are fortunate that your mother lived to see the heights you have reached . She must have left with great satisfaction. Only time will heal your pain . I share your grief .
- மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.
- ‘பிரம்மயுகம்’ படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான காட்சிகள் அனைத்தும் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை 'நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 'பிரம்மயுகம்' படத்தின் படப்பிடிப்பு 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும்.

சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் மெல்வி ஜே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஆகும். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'பிரம்மயுகம்' 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.