search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manipur CM"

    • மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
    • மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    மணிப்பூரில் முதல்வர் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கியுள்ளார்.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

    • முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள்.
    • ராஜினாமா முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை அவர் திரும்பிப் பெற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • ராஜினாமா தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

    இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×