search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manpreet Singh"

    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • அப்போது ஹாக்கி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மன்பிரித் சிங் ஆவார்.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங். இவரது தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங் கூறியதாவது:

    நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

    இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரிஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரிஸ் ஒலிம்பிக்சில் உள்ளது.

    மோசமான காலங்களில் குடும்பம் மற்றும் குழுவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர் தன்னை மிகவும் தனிமையாக உணர்கிறார். அணி ஒன்றாக நிற்கும்போது அது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, மீண்டு வருவதற்கு உதவுகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு சிறந்த மறுபிரவேசத்தைப் பார்த்தோம்.

    இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹாக்கியில் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    டோக்கியோவில் இருந்த 11 வீரர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாங்கள் அதையே தொடர்வோம். 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    நல்ல அணிகளுக்கு எதிராக எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் 50-50 வாய்ப்புகளை மாற்றுவது ஒரு சாம்பியனின் அடையாளமாகும். பாரிசில் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCupHockey #India #ManpreetSingh
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது அல்லது 3-வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.



    உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்திய அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித்குமார் உபாத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.

    அணி தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் ‘உலக கோப்பை போட்டிக்கு சரியான கலவையிலான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வில் சில கடினமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 18 பேர் கொண்ட இறுதி அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு பார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர்ந்து தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்றார். 
    ×