என் மலர்
நீங்கள் தேடியது "Manu Bakher"
- ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
- கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அந்த பதிவில், " இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.
இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு மானு பாகெர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மானு பாகெர் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் வாழ்த்துக்களுக்காக மிக்க நன்றி பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகப்பெரிய விஷயம்" என்றார்.
- ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
- மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மானு பாகெருக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராட்டியுள்ளனர்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "பாரீஸ் ஒலிம்ப்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மானு பாகெருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன" என்றார்.
தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " இந்தியா தனது ஒலிம்பிக் ஓட்டத்தை தகுதியான பதக்கத்துடன் தொடங்கியுள்ளது.
பாரீஸ்2024-ல் பெண்களுக்கான 10மீ பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.
உங்கள் சாதனை உங்களின் சிறப்பான திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.
இந்த முக்கியமான சந்தர்ப்பம் எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கட்டும்" என்றார்.
- துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை.
- ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் இந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிஸ் ஒலிம்பிக் என்ற பெயரில் நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். ஆனால் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 7 பதக்கங்கள் வென்ற நிலையில் இந்த முறை ஒரு பதக்கம் குறைவாகும்.
தடகளத்தில் நீரஜ் சோப்ரா வெள்ளி
தடகளத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், இந்த முறை பாகிஸ்தான் வீரரிடம் தங்கத்தை பறிகொடுத்தார்.
தகுதிச் சுற்றில் குரூப் "பி"-யில் நீரஜ் சோப்ரா 89.34மீ தூரம் ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதே பிரிவில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.59மீ தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். "ஏ" பிரிவில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர் அதிகபட்சமாக 97.86 மீட்டர் வீசினார்.

இதனால் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது சிறந்த முயற்சியோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா Foul ஆனார். 2-வது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். இதனால் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் பாகிஸ்தான வீரர் நதீம் 2-வது முயற்சியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 92.97மீ தூரம் எறிந்தார்.
நீரஜ் சோப்ரா அதன்பின் நான்கு முயற்சிகளிலும் ஏமாற்றம் அடைந்தார். இதனால் நதீம் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரேனடா வீரர் பீட்டர்ஸ் 88.54 மீ எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். வெள்ளி வென்று அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்று சாதனைப் படைத்தார்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 வெண்கல பதக்கம்: மனு பாக்கர் 2 பதக்கம் வென்று சாதனை
ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் ஸ்வாப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார். சீன வீரர் தங்க பதக்கமும், உக்ரைன் வீரர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீராங்கனையான மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சரப்ஜோத் சிங் உடன் கலந்து கொண்டு கொரிய அணியை 16-10 என வீழ்த்தினார்.
மல்யுத்தம் போட்டியில் வெண்கலம்
ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் போட்டியில் அமான் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டியை தவறவிட்டார்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பியூட்ரோ ரிகா வீரரை எதிர்கொண்டார். இதில் அமான் 13-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
ஹாக்கியில் வெண்கலம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என தோல்வியடைந்தது.

இதனால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.