என் மலர்
நீங்கள் தேடியது "Maoist"
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், பாலக்காடு மாவட்ட வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கும்பலாக பதுங்கி உள்ளனர். இவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குறிப்பாக கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகளின் விவரம் முழுமையாக சேகரிக்கப்படுகிறது. சுந்தரி உள்பட தேடப்படும் மாவோயிஸ்டுகள் சிலரின் புகைப் படங்கள் செக்போஸ்டில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம், காரமடை கோப்பனாரி வனத்திலும் இங்குள்ள அரக்கடவு, எழுத்துக்கல் புதூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள காட்டுக்குழிக்காடு, ராயர் ஊத்துப்பதி, கம்பு கண்டி மற்றும் அட்டுக்கல், சேம்புக்கரை, தூமனூர் உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த சோதனை நேற்று பிற்பகலில் தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக நீடித்தது. எல்லை வழியாக வரும் அரசு பஸ்களையும் நிறுத்தி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருக்கிறார்களா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் சோதனையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 40 பேர், மாவட்ட போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-
கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.
ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான விஷயம்.
இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards