என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maoist"

    கேரளாவில் இருந்து தப்பிய பெண் மாவோயிஸ்டு ஊடுருவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர்.
    கோவை:

    கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், பாலக்காடு மாவட்ட வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கும்பலாக பதுங்கி உள்ளனர். இவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பெண் மாவோயிஸ்டு சுந்தரி உள்பட சில மாவோயிஸ்டுகள் காரில் தப்பித்துள்ளதாகவும், அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவக்கூடும் என்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


    இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லை பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனைக்கட்டி, முள்ளி, மாங்கரை, பில்லூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பு அமைத்து வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

    குறிப்பாக கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகளின் விவரம் முழுமையாக சேகரிக்கப்படுகிறது. சுந்தரி உள்பட தேடப்படும் மாவோயிஸ்டுகள் சிலரின் புகைப் படங்கள் செக்போஸ்டில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம், காரமடை கோப்பனாரி வனத்திலும் இங்குள்ள அரக்கடவு, எழுத்துக்கல் புதூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

    ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள காட்டுக்குழிக்காடு, ராயர் ஊத்துப்பதி, கம்பு கண்டி மற்றும் அட்டுக்கல், சேம்புக்கரை, தூமனூர் உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த சோதனை நேற்று பிற்பகலில் தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக நீடித்தது. எல்லை வழியாக வரும் அரசு பஸ்களையும் நிறுத்தி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருக்கிறார்களா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் சோதனையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 40 பேர், மாவட்ட போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.#PMModi #Threat #Congress
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே போலீசார் பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பு என்பது தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றின் வலியை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இழந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என போலீசார் கூறுகின்றனர்.  மத்திய மந்திரி அத்வாலே அவர்களை தலித்துகள் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் என செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம் என்றார். #PMModi #Threat #Congress
    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன என்று அருண்ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். #BJP #ArunJaitley

    புதுடெல்லி:

    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-

    கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

     


    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.

    ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான வி‌ஷயம்.

    இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குடும்பத்துக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். #FadnaviMaoistthreat
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த மாதம் போலீசாருடன் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல் மந்திரி அலுவலக முகவரிக்கு அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரு மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சகம் இன்று குறிப்பிட்டுள்ளது. #FadnaviMaoistthreat 
    தாமாக முன்வந்து சரணடைந்த மாவோயிஸ்ட் இயகத்தை சேர்ந்தவருக்கு, போலீசார் தரப்பில் 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Maoist
    ராஞ்சி :

    ஜார்கண்ட் மாநிலம், லேட்ஹர் மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் போலீசாரின் 214 படைப்பிரிவு முகாமில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்சியில் போலீஸ் டி.ஜி.பி.விபுல் சுக்லா மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. ஜயந்த் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    அவர்கள், முன்னிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த விரேந்திர அலியாஸ் சங்கர் எனும் நபர் போலீசாரிடம் சரணடைந்தர். இவரின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் போலீசாரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமாகவே விரேந்திர அலியாஸ் சங்கர் போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.  #Maoist
    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையை வெற்றிகரமாக நடத்திய இரு மாவட்ட போலீசாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #OdishaMaoistoperation #Cashrewards
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards
    ×