என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maxwell"

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    • பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர்.
    • ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அந்தவகையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

    அதேபோல் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஆர்சிபி அணியின் இருந்து வில் ஜேக்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களை தவிர ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோரும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அந்த அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார்.
    • எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன்.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வந்துள்ளது.

    இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் சீசனில் நடந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறி வருகிறார்.

    அந்த வகையில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் இருக்கும் போது சேவாக் உடனான கசப்பான நினைவுகளை மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.

    அதில், 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார். பிளே ஆப்-க்கு செல்லவில்லை என்றாலும் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டதாகவேதே நினைத்தேன். கடைசி போட்டியின்போது அந்த அணியின் கேப்டனாக நான் செய்தியாளர்களை சந்திக்க சென்றேன்.

    ஆனால் எனக்கு பதில் சேவாக் செய்தியாளர்களை சந்தித்தது மட்டுமன்றி, நான் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறினார். பின்னா வாட்ஸ்அப் குழுவில் இருந்தும் என்னை நீக்கினார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன். அதற்கு அவர் "உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை" என கூறினார்.

    ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ நடந்தது என்று வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது என்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூறி உள்ளார். #Maxwell
    சிட்னி:

    கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடந்துள்ளது. 2017-ம் ஆண்டில் ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அல்ஜஜீரா சேனல் சமீபத்தில் பரபரப்பான புலனாய்வு வீடியோ செய்தியை வெளியிட்டது. ஆனால் அந்த செய்தியில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதில் மேக்ஸ்வெல்லுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் கிளம்பியது.

    இந்த சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ நடந்தது என்று வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அந்த போட்டியில் நான் முதல் சதம் அடித்தது மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணமாகும். சதம் அடித்ததும் ஸ்டீவன் சுமித்துடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது இன்னும் என் மனதில் நிலைத்து நிற்கிறது.

    எனது முதல் டெஸ்ட் சதத்தின் நினைவை அழிக்கும் மோசமான முயற்சியாகவே இதனை நான் நினைக்கிறேன். அந்த சூதாட்ட குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. கிரிக்கெட் ஆட்டத்திற்கு எதிராக நான் ஒருபோதும் எதுவும் செய்ததில்லை’ என்றார்.  #Maxwell

    லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 214 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் 19 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 24 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 62 பந்தில் 40 ரன்களும் அடித்தனர். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடியதால் ஆஸ்திரேலியா 47 ஓவரில் 214 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் சேய்து வருகிறது.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டியால் மேக்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #ENGvAUS
    ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி விரும்புகிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் இரண்டில் ஒற்றையிலக்க ரன்னிலேயே வெளியேறினார்.

    மேக்ஸ்வெல் ஃபார்ம் இன்றி தவித்தாலும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து டிப்ஸ் வழங்க இருக்கிறார்.



    அப்போது மேக்ஸ்வெல்லை ரிக்கி பாண்டியால் பழைய பார்முக்கு கொண்டு வருவார் என்று லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கான மேக்ஸ்வெல்லின் தயார்படுத்துதல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டவில்லை எனில், நான் மிகவும் ஆச்சர்யம் அடைவேன். அவரைப் பற்றி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருவது எனக்கு ஈர்ப்பை கொடுத்துள்ளது.

    மேக்ஸ்வெல் இரண்டு மாதங்களாக ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பணியாற்றியுள்ளார். ரிக்கி பாண்டிங் உடனான இந்த நிகழ்வு முக்கியமானது. ரிக்கி பாண்டிங் எங்கள் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இணைவார். மேக்ஸ்வெல் அவரது பயிற்சியை சிறப்பாக செய்து, அவர் மீது நம்பிக்கை வைத்தால், அவர் சிறந்த வீரராக மாறுவது வெகுதூரத்தில் இல்லை. அவர் ஏராளமான திறமையை பெற்றுள்ளார்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடருக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. #ENGvAUS
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. வரும் 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. அதன்பின் 27-ந்தேதி ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. சசக்ஸ் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஸின சதத்தால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் (106) அபார சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. ஷேன் மார்ஷ் 49 ரன்னும், ஆரோன் பிஞ்ச் 54 ரன்களும் சேர்த்தனர். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.



    ஸ்மித், வார்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாதது அந்த அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. கேன் ரிச்சர்ட்சன், ஸ்டேன்லேக், நேசர் ஆகியோரின் அபார பந்து வீச்சல் மிடில்செக்ஸ் அணி 41 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ×