என் மலர்
நீங்கள் தேடியது "Mohammad Amir"
- சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
- வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.
இந்நிலையில் சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அமீர் கூறியதாவது, என்ன ஒரு இன்னிங்ஸ், ஒரே ஒரு ரியல் கிங் என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது.
என அமீர் கூறினார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
- பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.
2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்.
- அப்போது ரமீஸ் ராஜா வர்ணனையாளராக இருந்து அவர்களை அடையாளப்படுத்தினார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது ஆமிர். இவர் 2010-ல் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதன்பின் தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 2010 போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, முகமது ஆமிருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியதாவது:-
முகமது ஆமிர் விவகாரத்தில் என்னுடைய பார்வை மிகவும் நேரடியானது. கிரிக்கெட்டை சரி செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூகமும், ரசிகர்களும் புரிந்து கொள்வது முக்கியம் என நான் நம்புகிறேன்.
முகமது அமிர் மேட்ச் பிக்சில் ஈடுபட்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நான் வர்ணணை செய்து கொண்டிருந்னே். நான் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியதால் வெறுப்பு என்னை நோக்கி வீசப்படும் என உணர்ந்தேன். மீடியாக்களால் நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் மறக்க முடியாது.
உலகின் எங்கெல்லாம் இது போன்று மேட்ச் பிக்கிங் ஈடுபட்ட வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கலாம். ஆனால், என்னுடைய அகராதியில் மன்னிப்பு என்பது கிடையாது. கடவுள் மறுத்தால் கூட என்னுடைய மகன் இதுபோன்ற செயல் செய்திருந்தால் நான் அவனை நிராகரிப்பேன்.
இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
- நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
- இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-
பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.
- ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
ஐசிசி-யின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக முகமது அமிர் கூறுகையில் "ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.
முக்கியத்துவம் போட்டியில் உள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் உள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலைப் பார்க்க விரும்புவோர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
2031 வரையிலான போட்டியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வேலையை இரண்டு மாதத்திற்கு முன்பு ஐசிசி தொடங்கியது ஏன்?. ஐசிசி-யின் செயல்பாடு மிக மிக சோம்பேறித்தனமாக உள்ளது" என்றார்.
- இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
- இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.
கராச்சி:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரின் முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்க தேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 - 50 சதவீதமாக குறைந்து விடும்.
என்று கூறினார்.
10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
2015-க்குப் பிறகு 73 போட்டிகளில் விளையாடியுள்ளார். 56 டெஸ்ட் விக்கெட்டுக்களும், 33 ஒருநாள் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 29 டி20 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். தற்போது அவரது பந்து வீச்சில் தொய்வு ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். கடைசி ஐந்து ஒருநாள் போட்டியில் விக்கெட்டுக்கள் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
சர்வதேச போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே சுய் சவுதர்ன் கியாஸ் கார்பரேசன் (SSGC) அணிக்காக விளைாடினார். தற்போது இந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.
தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.
அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று சூப்பர் 4 சுற்று தொடங்கின. முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது அமிர் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அறிமுகமாகியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சதாப் கானுக்குப் பதிலாக நவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பஹீம் அஷ்ரஃபிற்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.