என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mustard oil"

    • கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
    • கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.

    கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.

    சரும நிறம்:

    கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.

    சன்ஸ்கிரீன்:

    கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.

    முடி வளர்ச்சி

    தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    பாத வெடிப்பு:

    பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    • ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
    • ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது.

    இதய ஆரோக்கியத்தை பொறுத்த வரை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களைத் தயார் செய்யத் தேவைப்படும் எண்ணெயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.

    உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை அடங்கும். இதுதவிர, நம் அன்றாட உணவில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது.


    குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உணவுப்பொருட்களில் ஒன்றான கடுகு இல்லாமல் சில உணவு வகைகள் முழுமையடையாது. ஆனால், இது ஏன் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து யோசித்ததுண்டா?

    ஆம். சிறிய அளவிலான கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய் உண்மையில் உடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன.

    கடுகானது ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. கடுகு எண்ணெய்யில் சைனசிடிஸ், சளி, தடுக்கப்பட்ட மூக்கு, தோல் மற்றும் முடிக்கு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது.

    கடுகு எண்ணெய் நன்மைகள்:

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

    கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஒரு வகையான ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால், இது இதய நோயாளிகளுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.

    இந்த கொழுப்பு அமிலங்கள் வழக்கமான கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது பக்கவாதம், அரித்மியா மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்புகள்

    கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

    இந்த இரண்டு அமிலங்களுமே HDL கொழுப்பை அதிகரிப்பதற்கும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கொழுப்புகள் என அழைக்கப்படுகிறது.


    ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

    கடுகு எண்ணெயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

    ஆக்சிஜனேற்றிகள்

    இந்த எண்ணெயில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

    மேலும், இது இரத்த நாளங்கள் மற்றும் இதய திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ உள்ளது.


    ரத்த ஓட்டத்தை மேம்படுத்த

    கடுகு எண்ணெயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இது இதயம், செல்கள் மற்றும் திசுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெறுவதையும், ஆக்சிஜனை மாற்றுவதற்கான முழு செயல்முறையும் சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது. இல்லையெனில் இது மோசமான ரத்த ஓட்டம் அடைப்புகள் மற்றும் இதய பாதிப்புகளை விளைவிக்கலாம்.


    கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த

    ஆய்வுகளில் கடுகு எண்ணெய் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், அதே சமயத்தில் எச்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமான அளவை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

    மேலும், இது தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    * வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.



    * கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

    * பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    * மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    * வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

    * கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

    * பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    * மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    ×