search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Musumusukai leaf"

    • பித்தம், கபம் அதிகரித்த நிலைக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து.
    • நுரையீரலில் படிந்துள்ள சளியைக் கரைத்து வெளியேற்றக் கூடியது.

    முசுக்கை கொடி வகையைச் சார்ந்தது. இலைகளிலும், முதண்டுகளிலும், சொரசொரப்பாக ரோம இழை போலக் காணப்படும். தரைகளிலும், மற்ற செடிகளிலும், வேலிகளிலும் பற்றி வளரும்.


    பித்தம், கபம் அதிகரித்த நிலைக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து. பித்தத்துக்கு முசுமுசுக்கை மூலிகை ஒரு வரப்பிரசாதம். கபம் அதிகமாகி சுவாசமண்டலம் பாதிக்கும் நிலைக்கும் இம்மூலிகை ஒரு சிறந்த நிவாரணி ஆகும். நுரையீரலில் படிந்துள்ள சளியைக் கரைத்து வெளியேற்றக் கூடியது.

    சிலருக்கு உடல் சூடாக இருக்கும். ஆனால் கபம் அதிகரித்து சளி, இருமல் என தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். இத்தகைய உடல் தன்மையுள்ளவர்களுக்கு முசுமுசுக்கை சிறந்த மருந்து. பித்தத்தால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், ரத்த அழுத்தம் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் உள்ளது.

    இருமல், சுவாச நோய்கள், காசம், தலைவலி, தலையில் நீர்க் கோவையால் உண்டாகும் வலி, வறட்டு இருமல், தொண்டை வலி போன்றவற்றுக்கும் முசுமுசுக்கை சிறந்த மருந்தாகிறது.

    தேவையான பொருட்கள்:

    முசுமுசுக்கை இலை இஞ்சி-100 கிராம்

    இஞ்சி-10 கிராம் (தோல்சீவி பொடிதாக அரிந்து கொள்ளவும்)

    கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை-1 கைபிடி அளவு

    புளி- ஒரு கொட்டைப் பாக்களவு

    மிளகாய்வற்றல்- 3

    கறுப்பு உளுந்து- 1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

    உப்பு- சுவைக்கேற்ப


    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் புளி, மிளகாய் வற்றல், கறுப்பு உளுந்து போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் முசுமுசுக்கை இலை, கொத்தமல்லித் தழை, கறி வேப்பிலையை சேர்த்து வதக்கி, சற்று ஆறிய பின்னர் உப்பு கலந்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் முசுமுசுக்கை துவையல் ரெடி.

    இதை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இதனால் வயிற்றுவலி, பித்தம் நீங்கும், அஜீரணம் நீங்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், கல்லீரல் நன்கு செயல்பட உதவும். 

    ×