என் மலர்
நீங்கள் தேடியது "Mysskin"
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மிஷ்கின் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மை டியர் மிஷ்கின் சார்.. உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது. நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மில்லியன் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Dear @DirectorMysskin sir,
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 1, 2023
A million thanks won't suffice to express how grateful and fortunate I feel to have had the opportunity to work with you in such close capacity. We had an absolute blast having you on sets Sir.I can never thank you enough but a million thanks ! #Leo pic.twitter.com/0UGHOlsegW
- இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
- சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டார்.
2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதன்பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். படம் இயக்குவது மட்டுமல்லாது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிஷ்கின்
இந்நிலையில் சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தம் அடிக்கும் இயக்குனர்கள் நிச்சயம் வெற்றி இயக்குனர்களாக வலம் வருவார்கள் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, நான் அடுத்த படம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்தார்கள். அருகில் அமர்ந்த ஒரு பையன் தான் இயக்குனர் என்றனர்.

மிஷ்கின்
புகைப்பிடிக்கும் அடையாளம் அவர் முகத்தில் தெரிந்தது. அப்போதே படம் நிச்சயம் வெற்றி என தெரியும். தம் அடிக்கும் இயக்குனர்கள் வெற்றி பெறுவார்கள். முதல் படத்தில் ஒரு நாளுக்கு 100 சிகரெட் புகைத்தேன், அதன்பிறகு அஞ்சாதே படத்திற்கு சிகரெட் எண்ணிக்கை120 ஆனது. இவ்வாறு அவர் கூறினார்.
- மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- இவ்விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் கமல்ஹாசன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, "இரண்டு படத்துலேயே இருபது படத்துக்கானப் பேர வாங்கியிருக்கார் மாரி செல்வராஜ். எல்லாமே கேளிக்கை படம் இல்ல. வாழ்வின் வலியை உணர்ந்து எடுத்த படம். அவனுக்கு என் பாராட்டுகள். இளையராஜாவுக்குப் பிறகு ஜீனியஸ் ரகுமான் சார்.

அவர் ரொம்ப நாள் நல்லா வாழணும். நாகேஷ் சாருக்குப் பிறகு, உடல்மொழியில் மதுரை பார்மை கொண்டு வந்து உலகெங்கும் சேர்த்தவர் வடிவேல் சார் தான். உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, 'மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க 'சைக்கோ' மாதிரி பண்ணாதீங்க!. உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன். வெகு சீக்கிரத்தில் நம்மை எல்லாம் பார்த்துக்கொள்ளப் போகிறார் உதய். நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்" என்று மிஷ்கின் கூறினார்.
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
- இந்த படத்தின் முதல் பாடல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் முதல் பாடலே இப்படியா? என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
- இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள 'டெவில்' பட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
- இந்த பாடல் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டிருக்கிறது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

"டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் "கலவி" பாடல் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்துள்ளார். அதில், ஸ்லோ பாய்சன், அழகா இருக்கு என்று கூறியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மிஷ்கின் மேடையில் வரும் பொழுது ரசிகர்கள் லியோ லியோ என்று ஆரவாரம் செய்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது, லியோ-னா சிங்கம்.. விஜய் எப்போமே சிங்கம் தான். விஜய் ஒரு பெரிய குழந்தை. 21 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜய்யோட யூத் படத்துல வேலை செஞ்சேன். அப்போ எப்படி என்கிட்ட பேசினாரோ, இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அதே அன்போடு தான் பேசுறார் என்றார்.
மாவீரன் திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
- இப்படத்தில் ரஜினியின் லுக்கை சிவகார்த்திகேயன் பின்பற்றியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், இந்த பகுதியின் படப்பிடிப்புக்காக சிவகார்த்திகேயன் ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்துக் கொண்டார். இதுவரை நீச்சல் குளத்தில் 5 அடிக்கு கீழ் சென்றதில்லை என்று சிவகார்த்திகேயன் என்னிடம் கூறினார். ஆனால் நாங்கள் 18 அடியில் படமாக்கினோம். இதற்காக அவருடைய முழு உழைப்பையும் அவர் கொடுத்தார். சிவகார்த்திகேயன் படத்தின் அவுட்புட் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சாருக்கு வித்தியாசமான லுக் வேண்டும் என்று நினைத்தோம். ரஜினி சாரின் தளபதி பட லுக்கைப் போல, ஃபங்க் ஹேர் ஸ்டைலில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். இந்த லுக் சிவகார்த்திகேயன் சாருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால், இந்த லுக்கையே தேர்வு செய்து வைத்துவிட்டோம் என்று மனோன் அஷ்வின் தெரிவித்தார்.
- விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் 'லியோ' கிளைமேக்ஸ் காட்சி குறித்து மிஷ்கின் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'லியோ' படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய்யிடம் அடி தம்பி ஒன்றும் இல்லை என்று கூறினேன். அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்துதான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர் விஜய் அந்த காட்சியை செய்தார்" என்று பேசினார்.

'லியோ' குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது மிஷ்கின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், சிலர் இப்படி உளறிட்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில் படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்களை மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், மாவீரன் படக்குழு கமல் மற்றும் ரஜினியை படத்தில் பின்னணி குரல் கொடுக்க அணுகியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் பட பணிகளில் பிசியாக இருப்பதால் இதில் இணைய முடியவில்லை. இருந்தாலும் படத்தில் ஒரு முக்கிய பிரபலம் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது உங்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்றார்.
- விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில், இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே என்ன சார் அடுத்து கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். 'கொலை' என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக இயக்குனர் அவ்வளவு சண்டைப்போட்டிருப்பார். ஒரு நல்ல இயக்குனர் படத்தலைப்பின் எழுத்திற்காக வேலை செய்கிறார்.

கொலை இசை வெளியீட்டு விழா
இந்த எழுத்தின் மூலம் என் ஒட்டுமொத்த படத்தையும் புரிந்து கொள்ள முடியுமா என்று இயக்குனர் யோசிப்பார். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குனர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், 'லியோ' படத்தில் விஜய்குரிய காட்சிகள் நிறைவு பெற்றதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கினை சந்தித்த ரசிகர்கள் இப்படம் குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு மிஷ்கின், "எல்லாரும் விஜய் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள். அவர் மிகவும் இனிமையானவர். 'லியோ' படத்தில் நான் ஒரு சிறிய வில்லன்" என்று கூறினார்.