என் மலர்
நீங்கள் தேடியது "Nambiar"
- தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
- அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல்தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
இதே போல மேற்கு தொடர்ச்சி அணை பகுதியில் கனமழை பெய்வதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் வழித்தடத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.