என் மலர்
நீங்கள் தேடியது "Nanguneri student issue"
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
- மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.
பள்ளி மாணவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
அவர் நாங்குநேரி பகுதியில் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்பட்டுள்ளதா?, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை படித்த வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியிலும் உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.