என் மலர்
நீங்கள் தேடியது "Nathan McSweeney"
- பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
- நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை.
- தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மெல்போர்ன்:
இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க வீரர் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். 25 வயதான அவர் முதல் 3 டெஸ்டிலும் முறையே 10, 0,39,10,9,4 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு முறை கூட அரை சதத்தை தொடவில்லை. அவருக்கு பதிலாக 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வு குழுவை முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. தேர்வு குழுவினர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்து விட்டார்கள். உஸ்மான் கவாஜாவுக்கு 38 வயதாகிறது. அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை. தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.