search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Testing Agency"

    • தேசிய தேர்வு முகமையின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.
    • தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      புதுடெல்லி:

      நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேட்டார்.

      அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

      தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளி ஊழியர்களுக்கு அளிப்பது இல்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
    • பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 8-ந்தேதி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் மத்திய தேர்வு முகை மற்றம் மத்திய அரசு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த மறுப்பு தெரிவித்து விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்வை ரத்து செய வேண்டும். மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மனுக்களை ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

    மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நீதிமன்றம், NEET-UG-ஐ மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரகு மற்றும் NTA) உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும் கடுமையானதாகவும் மட்டுமல்ல, மீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
    • நெட் தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

    அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

    ஆனால் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.

    அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு பேனா பேப்பர் கொண்டு எழுத்து முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள நெட் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதியும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×