என் மலர்
நீங்கள் தேடியது "new india"
- கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
- எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றார்.
புதுடெல்லி:
மக்களவையில் பிரதமர் மோடி கும்பமேளா விவகாரம் குறித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கும்பமேளா விவகாரத்தில் பிரதமர் மோடி சொல்வதில் உடன்படுகிறேன். கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
ஆனால் ஜனவரி 29-ம் தேதி மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?
நான் சொல்ல விரும்பிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்களுக்கு பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயம் தேவை.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. பிரதமர் வேலைவாய்ப்பு குறித்து பேச வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி இல்லை. ஜனநாயக கட்டமைப்பின்படி மக்களவையில் பேச அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. காரணம் இது புதிய இந்தியா என தெரிவித்தார்.
- சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
- மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.
இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற தேர்தல் அடுத்த பிரதமர் யார்? அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது? என்பதற்கான தேர்தல் அல்ல.

இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பரம்பரை ஆட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், நாங்கள் தேசியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls #NewIndia #21stcentury #Modi #21stcenturyIndia

வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமன்றி 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடியை, அமித் ஷா சால்வை அணிவித்து வரவேற்றார். அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி அமித் ஷாவும் மோடியும் உற்சாகத்துடன் கையசைத்தனர். #karnatakaverdict #karnatakaelection2018 #Modi #AmitShah