என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New York City"

    • ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பறவை கூட்டங்களை போல் நேர்த்தியாக பல வடிவங்களில் பறக்க விடப்பட்டன

    அமெரிக்க மாநிலம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது புகழ் பெற்ற சென்ட்ரல் பார்க் (Central Park). நியூயார்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்குள்ள ஏரிக்கு அருகே சனிக்கிழமை இரவு ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் "பிரான்சைஸ் ஃப்ரீடம்" (Franchise Freedom) எனும் பெயரில் நடத்தப்பட்ட ஒரு கண்கவர் நிகழ்வு உலகமெங்கும் பேசுபொருளாகி வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.

    10 நிமிட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறந்த இவை, இது போல் 3 முறை பல வெவ்வேறு விதமான வடிவங்களை வானில் வெளிப்படுத்தின. ஒவ்வொரு டிரோனில் இருந்தும் வரும் சிறு ஓளி ஒட்டு மொத்தமாக 1000 டிரோன்களில் இருந்து பெரும் நட்சத்திர கூட்டம் போன்று வானில் தெரிந்தது.


     



    இந்த டிரோன்கள், வானில் பல வடிவங்களில் பறவை கூட்டம் போல் நேர்த்தியாக பறக்க விடப்பட்டது காண்போரை மிகவும் பரவசப்படுத்தியது.

    "மனிதன், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரே சமூகமாக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது" என தங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இரவு நேர பறவைகள், பறக்கின்ற வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என விலங்குகள் மற்றும் பறவைகள் நல அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது ஏற்பாடு செய்யப்பட்டதாக டிரிஃப்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

    ஒரே சமயத்தில் இத்தனை டிரோன்கள் வானில் பறக்கும் நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


     

    • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது.
    • இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின.

    நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

    பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    நிலநடுக்கம் குறித்து, ஐகானிக் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அதன் எக்ஸ் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், " நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய- அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த எவரும் தயவுசெய்து madad.newyork@mea.gov.in என்கிற முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


    இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

    ×