என் மலர்
நீங்கள் தேடியது "Newdelhi"
- மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
- ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் எங்கள் திமுக மாணவரணி, எம்.பி.க்கள் மற்றும் இந்தியா தொகுதியின் உறுப்பினர்கள், என் அன்பான சகோதரர்கள் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ், தலைநகரில் மாணவர்களின் குரல்களைப் பெருக்கி, கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ்-பிஜேபி-யின் நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது: ஒரு தனித்துவமான அடையாளத்தை திணிப்பதற்காக பல்வேறு வரலாறுகள், மரபுகள் மற்றும் மொழிகளை அழிப்பது. எனது சகோதரர் ராகுல் காந்தி சரியாகச் சொன்னது போல், யுஜிசி வரைவு வெறும் கல்வி நடவடிக்கை மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவின் கூட்டாட்சியின் சாராம்சம்.
நீட் முதல் சி.ஏ.ஏ முதல் என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் வரை, நமது அரசியலமைப்பு மற்றும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது. இன்று, புது தில்லியில் எங்கள் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் கிராரி பகுதியைச் சேர்ந்தவன் ராஜ்குமார் (30). இவன் அதேப்பகுதியில் ஒரு ஷோரூமில் பணிப்புரியும் பெண்ணை, 2 மாதங்களுக்கு முன்னர் ஜிம் ஒன்றில் சந்தித்துள்ளான். அப்போது, தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறியுள்ளான். பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.
நாளடைவில் ராஜ்குமார் அந்த பெண்ணை விரும்புவதாகவும், தனக்கு புற்றுநோய் உள்ளதால் திருமணம் செய்ய இயலாது எனவும் கூறியுள்ளான். இறப்பதற்கு முன் அப்பெண்ணை ஒரு அரசாங்க அதிகாரியாக பார்த்திட வேண்டும் என கூறியுள்ளான். இதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் என கூறவே, அதை நம்பி அப்பெண்ணும் பணத்தைக் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் ராஜ்குமாரிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதை அறிந்தார். பின்னர் அவரது சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்ந்து மறுத்து வந்துள்ளான்.
இதையடுத்து கடந்த வெள்ளி அன்று அப்பெண், ராஜ்குமார் தன்னை ஏமாற்றிவிட்டு, மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக துணை கமிஷனர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ‘நான் ஒரு வாகன ஓட்டுனர். ஐபிஎஸ் அதிகாரி அல்ல. முன்னதாக ஜிம்மில் பணியாற்றி வந்தேன்’ என ராஜ்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #FakeCopArrested