என் மலர்
நீங்கள் தேடியது "nightclub"
- கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
- கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
சாண்டோ டொமிங்கோ:
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.
இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.
நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
- இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இந்த விபத்தில் சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் சொல்லப்படுகிறது.
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடு களுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்கு னர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறும்போது, கேளிக்கை விடுதியின் மூன்று பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப்பணி நடந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி மக்களைத் தேடுகிறோம் என்றார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
- ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
- சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்தனர்.
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் 100 பேர் வரை காயமடைந்தனர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற நைட் கிளப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கிளப் கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.
இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது.
- துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் குண்டடிபட்டுள்ளனர். சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சமபாவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.
மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவுக்கு மேல் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்றிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூத்தில் 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டடி பட்ட 16 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமாக உள்ள நிலையில் மளிகைக் கடைகளில் ஏடிஎமில் பணம் எடுப்பது போன்று குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துள்ளது. அதை அந்நாட்டு மக்கள் வரவேற்றும் உள்ளனர். எனவே அங்கு வன்முறை சகஜமாகிவருவதாக நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது.
மேலும், வன்முறை, துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவையும் ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவு.
கடந்த 1996-ம் ஆண்டில் இங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். #Australiashooting ##Australianightclub #Melbourneshooting
வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.
அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். #Venezuela #NightClub #Violence #tamilnews