என் மலர்
நீங்கள் தேடியது "NLC Workers"
நெய்வேலியில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
நெய்வேலி:
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்களை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்திருப்பது ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஆரம்பம் என்று தொழிலாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே இடத்தில் அதிக ஊழியர்கள் பணியில் இருந்ததால் மாற்றப்பட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1ஏ முன்பு மறியல் செய்ய வந்தனர். அப்போது சுமார் 25 தொழிலாளர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
