என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nostradamus"

    • 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார்.
    • உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.

    15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார்.

    இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தார்.

    இவர் 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார். அதுபோன்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மருமகள் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நாஸ்ராடா மசின் புத்தகத்தில் தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    இதில் தீவுகளின் மன்னர் என்பது சார்லசைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.அவர் கூறியது போல மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் தானாகப் பதவி விலகுவார் அல்லது உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஹாரி மன்னர் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாகவே நாஸ்ட்ராடாமஸ் சொல்லும் எதிர்பாராத வாரிசு ஹாரிதான் என்கிறார்கள்.

    • 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
    • பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்

    16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், வருங்காலம் குறித்த தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.

    அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும். இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

     

    அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

    நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

     

    அவரது கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் [அது ஒரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்] போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.

    மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.  

    ×