என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nuh violence"

    • அரியானா மாநிலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கவுகாத்தி:

    அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

    அப்போது குர்கான்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்தபோது, ஒரு அமைப்பினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது. இதில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

    தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    • அரியானாவின் குருகிராமில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 40 பேர் காயமடைந்தனர்.
    • இதையடுத்து, குருகிராமில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அரியானா மாநிலம் குர்கிராம் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

    அப்போது குர்காம்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்தபோது, ஒரு அமைப்பினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது. இதில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

    தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அத்துடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்

    தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலவரம் எதிரொலியாக, அரியானாவின் குருகிராமில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ஜூலை 31-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீச்சு
    • மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிசத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் வெடித்து, பின்னர் வன்முறையாக மாறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்மான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    வன்முறை தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-ல் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மம்மான் கான் பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தகவலை சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்டாப் அகமது உறுதி செய்துள்ளார்.

    ×