என் மலர்
நீங்கள் தேடியது "ODI Cricket"
- மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரதிகா 78 ரன்கள் எடுத்தார்.
இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.
முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.
அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-
பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா)
சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
பெலிண்டா கிளார்க் - 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
வெண்டி வாட்சன் - 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
188 - தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017
171* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017
154 - பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025
143* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022
138* - ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005
- 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ரேணுகா தாகூரும் தட்டி சென்றனர்.
மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே - சினெல்லே ஹென்றி ஜோடி அணியை மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரை சதம் விளாசினார். அவர் 61 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 4 ரன்னிலும் ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 18, கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 என வெளியேறினார்.
இறுதியில் தீப்தி சர்மா (39) மற்றும் ரிச்சா கோஷ் (23) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
- கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.
- மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்
ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013
சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014
மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016
ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018
எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019
லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021
நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022
சாமரி அதபத்து (இலங்கை) - 2023
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024
- அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
- நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.
இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.
அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.
எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
என்று பட்லர் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 87 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் விராட் கோலி மற்றும் முகமது சமியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2022 முதல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
முகமது சமி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 4, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் 3 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
- 2-வது இன்னிங்சின் போது மின்விளக்கு பழுதானதால் கிட்டதட்ட 35 நிமிடங்கள் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியின் போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2-வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்விளக்குகள் எரியாததால் 35 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.
- இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் ஹோட்டலில் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளம் ரசிகர் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் போடும் படி கேட்டுக்கொண்டார். மேலும் அந்த சிறுவனிடம் ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா சிறிது நேரம் உரையாடினர்.
பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வாலிடமும் ஆட்டோகிராப் வாங்கிங் கொண்டு அந்த சிறுவன் அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
- முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது.
அல் அமராட்:
உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து 123 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.
மேலும் ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.
இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 போட்டியில் அவுட் இல்லை என்பதால் அவரது சரராசரி 60.30 ஆகும். 4 சதமும், 9 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 127 ரன் குவித்துள்ளார்.
தற்போது நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 187 ரன்கள் தேவை. 5 ஆட்டத்தில் கோலியால் இந்த ரன்னை எடுக்க இயலும்.
ராகுல் டிராவிட் 1348 ரன்னும் (40 போட்டி), கங்குலி 1142 ரன்னும் (27 போட்டி) அசாருதீன் 998 ரன்னும் (43 போட்டி) எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

தெண்டுல்கர், கோலி, டிராவிட், கங்குலி ஆகிய 4 இந்திய வீரர்களே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.
இவர்களது வரிசையில் டோனி இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 101 ரன் தேவை. டோனி 33 போட்டியில் விளையாடி 899 ரன் எடுத்து உள்ளார்.
5 ஒருநாள் போட்டியில் 101 ரன்களை எடுப்பதன் மூலம் அவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1000 ரன்னை கடப்பார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.
டோனியின் ஆட்டம் எப்படி இருந்தாலும் 2019 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார் என்று தேர்வுக்குழு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் டோனிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், டோனிதான் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த் முதன்மை பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் சிறப்பான ஆட்டம்தான் முதல் அளவுகோல் என்று டோனியின் ஆட்டம் குறித்து கவுதம் காம்பிர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘சிறப்பான ஆட்டம் (Performance) என்ற ஒரே அளவுகோலால் மட்டுமே அணியில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்க முடியும். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், இந்திய அணியில் ஒரு அங்கமாக பங்கேற்க இயலாது.
வயது ஒரு பிரச்சனை அல்லை. டோனி சிறப்பாக விளையாடி, விமர்சனங்கள் தவறானவை என்பதை நிரூபிக்க விரும்புவார் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.

லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.
தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.