என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ONOE bills"

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது.

    இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.

    மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடா்பாக அரசமைப்பு சட்டப் பிரிவு 82ஏ-ல் புதிதாக துணைப் பிரிவு (2)-ஐ சோ்க்கவும், மக்களவை, சட்டப் பேரவைகளை கலைப்பது தொடா்பாக சட்டப் பிரிவு 83(2)-ல் புதிதாக துணைப் பிரிவுகள் (3), (4)-ஐ சோ்க்கவும், ஒரே நேரத்தில் இரு தோ்தல்களையும் நடத்துவது தொடா்பாக சட்டப்பிரிவு 327-ல் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த முதல் மசோதா வழிவகை செய்கிறது.

    இரண்டாவது மசோதாவைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி, டெல்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடைய 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பானதாகும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆரம்பத்திலேயே தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள்.

    இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தி.மு.க. எதிர்க்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தேவையான பெரும்பான்மை அரசுக்கு இல்லாதபோது எதற்கு இதை அனுமதிக்கிறீர்கள்?

    பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்பவேண்டும். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார்.

    ஆனால் பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


    • ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது. இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 20 பா.ஜ.க. எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
    • 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்டத்திருத்தங்கள் செய்ய வேண்டும் என ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.

    இதன்படி 3 சட்டப்பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என மொத்தம் 18 சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

    ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின்போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    ×