என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Owaisi"

    • என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
    • பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

    குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக பேசிய என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, "இளம் மாணவர்களுக்கு கலவரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சமூகத்தில் அவர்கள் வெறுப்பை உருவாக்கவோ வெறுப்புக்கு ஆளாகவோ கற்றுக் கொடுக்க வேண்டுமா? வளர்ந்த பிறகு அவர்களே தெரிந்து புரிந்து கொள்வார்கள். கல்வியின் நோக்கம் வன்முறையைத் தூண்டுவதல்ல. எல்லா விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.

    என்.சி.இ.ஆர்.டி தலைவரின் இந்த பொறுப்பற்ற பதில் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்கு உள்ளது. இது வரலாற்றை மறைத்து திரிக்கும் செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் எம்.பி ஒவைசி, " பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதி இழிவுபடுத்தப்பட்டு, 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களைக் கொண்டாடும் வகையில் குழந்தைகள் வளரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    • இந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • வக்ஃப் திருத்த மசோதாவின்படி முஸ்லிம் அல்லாதவர்களை எப்படி வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக்க முடியும்?

    பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி, இந்து அல்லாத மத நடவடிக்கைகளை பின்பற்றியதால் 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பதி உள்ளிட்ட எந்த கோவிலுடன் தொடர்பில்லாத பதவிகளுக்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

    வேலைக்கு சேர்ந்த இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள், இந்துக்களின் நம்பிக்கையை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றிருந்தனர். தற்போது அந்த உறுதிமொழியை அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான போர்டின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

    திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான போர்டின் இந்த முடிவு குறித்து பேசிய எம்.பி. அசாதுதீன் ஓவைசி, "இந்து அல்லாதவர்களை திருப்பதி தேவஸ்தான போர்டு நீக்கும்போது, எந்த அடிப்படையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆதரிக்கிறது. அதில் மாநில முஸ்லிம் வக்பு வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆக்வே சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வக்பு திருத்த மசோதாவின்படி முஸ்லிம் அல்லாதவர்களை எப்படி வக்பு வாரியத்தில் உறுப்பினராக்க முடியும்? வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானது. இது முற்றிலும் தவறானது" என்று தெரிவித்தார். 

    • ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
    • AIMIM போட்டியிட்ட ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

    கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி AIMIM கட்சி வேட்பாளர்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளனர்.

    ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் என்ற 2 தொகுதிகளில் AIMIM போட்டியிட்டது. ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    ஓக்லா தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 23639 வாக்குகள் அதிகம் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 12739 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

    முஸ்தபாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 17578 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 11763 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

    இந்தியர்களுக்கு இனி மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும் என்ற பாபா ராம்தேவ் கருத்தை ஒவைசி கண்டித்துள்ளார்.
    ஐதராபாத்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல யோகாசன குருவும் ‘பதாஞ்சலி’ நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    ‘அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நமது நாட்டின் மக்கள்தொகை 150 கோடியை தாண்டிப்போக நாம் அனுமதிக்க கூடாது. 150 கோடியை கடந்த ஒரு மக்கள்தொகையை தாங்கும் சக்தி நம்மிடம் இல்லை.

    இனி மூன்றாவதாக அல்லது அதற்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி இருந்தார்.

    பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாட்-உல்-முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



    ‘அரசியலமைப்புக்கு முரணாக கருத்து தெரிவிப்பவர்களை தடுக்கும் சட்டம் ஏதுமில்லாத நிலையில் பாபா ராம்தேவின் பேச்சு அவசியமில்லாத முக்கியத்துவத்தை எப்படி பெறுகிறது?

    அவர் (பாபா ராம்தேவ்) தனது வயிற்றை வைத்து வித்தை காட்டுவார், அமர்ந்தவாறே கால்களை சுழற்றுவார் என்பதற்காக மூன்றாவது பிள்ளையாக பிறந்த காரணத்துக்காக நரேந்திர மோடி தனது வாக்குரிமையை இழக்க வேண்டுமா?’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
    பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் வைத்துள்ள உறவு லைலா-மஜ்னு காதலை விட வலிமையானது என குறிப்பிட்டுள்ளார். #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    பாட்னா:

    மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் அக்தாருல் இமாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்தாருல் இமாமுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்.

    பாஜகவுக்கு வாக்களிக்கா விட்டால் முஸ்லிம்கள் அரசு வேலைகளில் சேர முடியாது என்று பேசிய மத்திய மந்திரி மேனகா காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி, பாஜகவின் ‘சப் கா சாத் - சப் கா விகாஸ்’ (எல்லோருடனும் இணைந்து - எல்லோரின் நன்மைக்காகவும்) என்ற கோஷம் இதன் மூலம் பொய் என்று புலப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.



    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் இப்போதுள்ள உறவு மிகவும் வலிமையானது. லைலா-மஜ்னு காதலை விடவும் வலிமையானது.

    இந்த காதல் கதை புத்தகமாக எழுதப்படும்போது இவர்களில் யார் மஜ்னு? என்று என்னை கேட்காதீர்கள் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    ஆனால், இந்த லைலா-மஜ்னுவின் கதை எழுதப்படும்போது காதலுக்கு பதிலாக அதில் வெறுப்புணர்வு இருக்கும். இந்த ஜோடி ஒன்று சேர்ந்த பிறகு இந்தியாவில் இந்து-முஸ்லிம் இடையே பதற்றம் அதிகரித்தது என அதில் எழுதப்பட்டிருக்கும் எனவும் ஒவைசி கூறினார்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று முதல் மந்திரியான நிதிஷ் குமார், பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவுக்கு ஆதரவாக தனது போக்கை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
    ஐதராபாத்:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.


    இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.

    தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan 
    நகரங்கள் பெயரை மாற்றுவதோடு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பெயரையும் மாற்ற வேண்டும் என்று மஜ்லிஷ் கட்சி எம்.பி. ஓவைசி கூறியுள்ளார். #Owaisi​ #BJP #AmitShah

    ஐதராபாத்:

    உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முகலாயர் ஆட்சி காலங்களில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு 25-க்கும் மேற்பட்ட நகரங்களின் பெயர் இதுவரை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மஜ்லிஷ் கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெயர் மாற்றம் பிரச்சினையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் பல நகரங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பெயர்களை தொடர்ந்து மாற்றி வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் பெயர் அமித் ஷா என்று உள்ளது.

    இதில் ஷா என்பது பெர்சிய (ஈரான்) பெயர் ஆகும். எனவே, ஷா என்ற பெயரை அவர் வைத்துக் கொள்ள கூடாது.


    இதனால் அமித் ஷா தனது பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் மாடுகள் கொடுப்போம் என்று கூறுகிறார்கள்.

    மாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடு கொடுக்கப் போகிறார்களா? என்னிடம் மாட்டை கொடுத்தால் நான் மரியாதை கொடுக்க முடியுமா?

    ஒவ்வொரு மாடும் தினமும் 16 கிலோ தீவனம் சாப்பிடும். இவர்கள் ஒரு லட்சம் மாடுகள் கொடுத்தால் தினமும் 16 லட்சம் கிலோ உணவு தேவைப்படும். இவ்வளவு உணவுக்கு எங்கே போவது?

    நான் உண்மையை பேசினால் நான் அவதூறாக பேசுவதாக கூறுவார்கள். நான் எதார்த்தத்தைதான் கூறுகிறேன்.

    தெலுங்கானா மாநிலம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

    இவ்வாறு ஓவைசி பேசினார். #Owaisi​ #BJP #AmitShah

    முத்தலாக் ஒழிப்பு அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் சட்டம் தேவை என குறிப்பிட்டுள்ளார். #Owaisi #TripleTalaqBill
    ஐதராபாத்:

    முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஐதரபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒவைசி, ’இந்த அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அவர்களுக்கான நீதியை இந்த அவசர சட்டம் அளிக்காது. இஸ்லாம் மதத்தில் திருமணம் என்பது இருவருக்கு இடையிலான பொது ஒப்பந்தம் போன்றது. இதற்குள் தண்டனைக்குரிய கிரிமினல் சட்டங்களை நுழைப்பது தவறானது.

    முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராக உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டமானது ‘அனைவரும் சமம்’ என்னும் அரசியலைப்பு சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் மகளிர் அமைப்புகள் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடர வேண்டும்’ என குறிப்பிட்டார்.



    இதற்கு ஒரு அவசர சட்டம் இயற்றியதுபோல் கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்துகிறேன். தேர்தல் காலத்தில் இவர்களின் கணவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் தாங்கள் திருமணம் ஆனவர்கள், ஆனால், மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கின்றனர்.

    எனவே, இப்படி கைவிட்டப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பிரதமர் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்' எனவும் ஒவைசி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் திருமணமானவர், ஆனால், தனியாக வாழ்பவர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவரை மறைமுகமாக தாக்கும் நோக்கத்தில் ஒவைசி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Owaisi #TripleTalaqBill #24lakhmarriedwomen
    ×