என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Pakistan International Airlines
நீங்கள் தேடியது "Pakistan International Airlines"
பாகிஸ்தானில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களும் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். #PIA #PakistanSC
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது.
மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் 7 பேரின் கல்விச் சான்றிதழ் போலியானவை என கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இது குறித்து நீதிபதி கூறுகையில், “பள்ளி படிப்பை முடிக்காத நபர்கள், பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்கள். விமானத்தை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர், “தங்களின் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனவும் உத்தரவிட்டார். #PIA #PakistanSC
பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது.
மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் 7 பேரின் கல்விச் சான்றிதழ் போலியானவை என கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இது குறித்து நீதிபதி கூறுகையில், “பள்ளி படிப்பை முடிக்காத நபர்கள், பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்கள். விமானத்தை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர், “தங்களின் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனவும் உத்தரவிட்டார். #PIA #PakistanSC
பாகிஸ்தான் விமானம் தரை இறங்கியபோது அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி ஓடுதளத்தை கடந்து சென்று விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #Pakistan #PIA #Runway
கவாதர்:
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி விட்டது. இதனால் விமானம் சறுக்கியது. அது, ஓடுதளத்தை கடந்து சென்று நின்றது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஓடுதளத்தின் தரைப்பரப்பு மிக மிக மோசமான நிலையில் இருந்ததால் தான் விமானத்தின் டயர்களில் காற்று இறங்கிவிட்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பஞ்ச்குர் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் சிறிது நேரம் விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் அறிக்கை கேட்டுள்ளார். விபத்தில் பணியாளர்களின் தவறு காரணமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். #Pakistan #PIA #Runway
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி விட்டது. இதனால் விமானம் சறுக்கியது. அது, ஓடுதளத்தை கடந்து சென்று நின்றது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஓடுதளத்தின் தரைப்பரப்பு மிக மிக மோசமான நிலையில் இருந்ததால் தான் விமானத்தின் டயர்களில் காற்று இறங்கிவிட்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பஞ்ச்குர் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் சிறிது நேரம் விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் அறிக்கை கேட்டுள்ளார். விபத்தில் பணியாளர்களின் தவறு காரணமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். #Pakistan #PIA #Runway
×
X