என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvENG"

    • இங்கிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று 3 டெஸ்டில் விளையாடுகிறது.
    • டி20 தொடரின் போது வழங்கப்பட்ட உணவு உயர் தரமாக இல்லை என்று வீரர்கள் அதிருப்தி.

    இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஏழு டி20 போட்டிகளில் விளையாடியது. இந்தத் தொடரை 4-3 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது.

    தற்போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.

    டி20 தொடரின்போது இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கிய உணவு தரமாக இல்லை எனவும், சில வீரர்களுக்கு வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் டெஸ்ட் போட்டிக்கான அணியுடன் சமையல் கலைஞரை (Chef) அனுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018 உலகக் கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 202 கால்பந்து தொடரின்போது இங்கிலாந்து கால்பந்து அணியுடன் இதுபோன்று செஃப் அனுப்பப்பட்டார்.

    தற்போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக செஃப்-ஐ அனுப்ப இருக்கிறது.

    பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 1-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் முல்தானிலும், 3-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற இருக்கிறது.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

    கராச்சி:

    17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9-ந் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17-ம் கராச்சியிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது.

    கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    • முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
    • ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    ராவல்பிண்டி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

    அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

    1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

    2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

    2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

    2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

    2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹாரி புரூக் அதிகபட்சமாக 153 ரன் எடுத்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.

    ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர். இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹாரி புடூக் 153 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 41 ரன்னும், ராபின்சன் 37 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் முகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் பொறுமையுடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷபிக் 89 ரன்னும், ஹக் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 2 நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தனர்.

    தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 114 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 121 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 657 ரன்கள் குவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது.

    இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 268 ரன்களில் சுருண்டது. சவுத் ஷகில் (74), இமாம் உல் ஹக் (48), முகமது ரிஸ்வான் (46), அசார் அலி (40) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 4 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி தொடங்குகிறது.

    • இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இங்கிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் ஜோடி களமிறங்கியது.

    சாக் கிராலி 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து ஓலி போப் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 49 பந்தில் 63 ரன்கள் எடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 8 ரன்னிலும் பிரோக் 9 ரன்னிலும் வெளியேறினர். அப்ரார் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    முல்தான்:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பென் டக்கெட் 63 ரன்னும், ஒல்லி போப் 60 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார். ஜாஹித் மக்முது 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் ஆசம் 75 ரன்னும், ஷாகில் 63 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இதுவரை 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது.
    • 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

    முல்தான்:

    பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 108 ரன்கள் குவித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜாவித் மகமூத் 3 விக்கெட்களை சாய்த்தார்.

    இதையடுத்து 355 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் அப்துல்லா சபிக் 45 ரன்னும், ரிஸ்வான் 30 ரன்னும் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். பாபர் ஆசம் 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.இமாம் உல் ஹக் 60 ரன்கள் குவித்தார். சவுத் ஷகில் 54 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் இன்னும் 6 விக்கெட்கள் உள்ளன. இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இங்கிலாந்து பந்து வீச்சை சமாளித்து பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    • 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது.

    முல்தான்:

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் (74 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (16 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தனது 2-வது சதத்தை எட்டிய ஹாரி புரூக் 108 ரன்களில் (149 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்படத்தக்கது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு 355 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

    இதற்கு முன்பு ஒரே ஒரு முறை 350-க்கு மேலாக இலக்கை விரட்டிப்பிடித்து இருக்கும் பாகிஸ்தான் அணி, மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த முகமது ரிஸ்வானும், அப்துல்லா ஷபிக்கும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் (15.5 ஓவர்) திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர்.

    ரிஸ்வான் 30 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 45 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் (1 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 83 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானை சாத் ஷகீலும், இமாம் உல்-ஹக்கும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இமாம் உல்-ஹக் 60 ரன்களில் (104 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனாஅர். நேற்றைய முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. சாத் ஷகீல் 54 ரன்களுடனும், பஹீம் அஷ்ரப் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட், ஜாக் லீச் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரம் தாக்கு பிடித்த பாகிஸ்தான் அணி உணவு இடைவேலைக்கு அப்புறம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 17-ந் தேதி தொடங்குகிறது.

    • சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    முல்தான்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 3-வது நடுவர் கொடுத்த ஒரு தவறான தீர்ப்பால், ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவுமே தலைகீழாக மாறியது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற சூழலில், 2வது போட்டியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது போட்டியிலும் போராடி தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என தோற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 275 ரன்களை அடித்தது. இதனால் 355 என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 328 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாவுத் சகீல் சிறப்பாக ஆடி வந்தார். அவர் 213 பந்துகளில் 94 ரன்களை அடித்திருந்த போது துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று தவறியதால் கீப்பரிடம் கேட்ச்சானது. ஆனால் அது கேட்ச் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    விக்கெட் கீப்பர் ஒல்லி போப் தரைக்கு மிகவும் அருகில் இருப்பது போன்று அந்த கேட்ச்-ஐ பிடித்தார். இதனால் 3-வது நடுவருக்கு பரிந்துரைத்த 2 கள நடுவர்கள், சாஃப்ட் சிக்னலாக அவுட் என முடிவு தெரிவித்தனர். விக்கெட்டை ஆராய்ந்து பார்த்த 3-வது நடுவர், தரையில் பட்டது போல தான் உள்ளது. ஆனால் எந்தவித நிரூபனமும் ஆகாததால், கள நடுவர்களின் முடிவுக்கே செல்வதாக கூறி அவுட் கொடுத்தார்.

    இந்த ஒரு முடிவால் பாகிஸ்தானுக்கு பெரும் அடி விழுந்தது. சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர். செட்டில் பேட்ஸ்மேன் என யாருமே இல்லாததால் 328 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிடமும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ×