என் மலர்
நீங்கள் தேடியது "PAKvIND"
- ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற இருக்கிறது
- உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்ப்பு
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுமா? என்பதே இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. குஜராத்தில் மோதுவது போன்ற அட்டவணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மன் நஜம் சேதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் இந்தியா செல்ல வேண்டுமென்றாலும், இந்தியா பாகிஸ்தான் வர வேண்டும் என்றாலும் இரண்டு நாடுகளுக்குரிய அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும்.
குஜராத் மைதானத்தில் மோத வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க ஏதும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் 13 போட்டிகளில 4 மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மற்ற 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஆசியகோப்பை போட்டி குறித்து கூறுகையில் ''இந்தியா பாகிஸ்தான் வர மறுத்ததால் தீர்வுகாண ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மேலும் சில போட்டிகள் நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கு விளையாடிய பின், இலங்கை செல்வது கடினம் என்பதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
- பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் ஜமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
ராவல்பிண்டி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் சமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.
இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.
நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.
எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.
இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த நம்பிக்கையில் பாகிஸ்தான் களம் இறங்குகிறது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஹசன் அலி திகழ்கிறார்.
இவர் இந்தியாவிற்கு எதிராக 10 முறை விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களை விட நாங்கள்தான் டாப். சாம்பியன்ஸ் டிராபியில் அப்படித்தான் அவர்களை தோற்கடித்தோம்.

இந்தியாவிற்கு எதிராக விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தும் என்னுடைய ஸ்டைலை 10 முறை செய்ய விரும்புகிறேன். ஆனால், என்ன நடக்க இருக்கிறதை என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்றார்.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.

நாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.
விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் சவால் கொடுக்கும். ரசிகர்கள் சிறந்த ஆட்டத்தை கண்டுகளிக்க இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.