என் மலர்
நீங்கள் தேடியது "PAKvsNZ"
- போட்டி முடிவடைந்த பிறகு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
- அப்போது ஒரு ரசிகருக்கும் குர்ஷில் ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியது.
அதன்பின் ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
போட்டி முடிவடைந்த பின்னர் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பவுண்டரி லைன் அருகே ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் வீரர் குர்ஷ்தில் ஷா, ஒரு ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது.
உடனடியாக பாதுகாவலர்கள் குர்ஷ்தில் ஷாவையும், ரசிகரையும் தனித்தனியாக இழுத்துச் சென்றனர். குர்ஷ்தில் ஷாவை பாதுகாப்பாக மைதானத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதேவேளையில் ரசிகரை மைதானத்தில் வெளியேற்றினர். இதனால் கொஞ்ச நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது.
- அபாரமாக ஆடிய சாத் ஷகீல் 124 ரன்களுடன் களத்தில் உள்ளார்
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 20 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 74 ரன்னுடனும், சாத் ஷகீல் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாத் ஷகீல், சர்ப்ராஸ் அகமது இணைந்து நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். சர்ப்ராஸ் அகமது 78 ரன்களில் வெளியேறினார். நிலைத்து ஆடிய சாத் ஷகீல் சதம் அடித்து அசத்தினார். இடதுகை ஆட்டக்காரரான அவருக்கு இது முதல் சதம் ஆகும். மறுபுறம் ஆகா சல்மான் 41 ரன்களுக்கும் , ஹசன் அலி 4 ரன்களுக்கும், நசீம் ஷா 4 ரன்களுக்கும் வெளியேறினர்.
இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷகீல் 124 ரன்களுடனும், அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 3 விக்கெட், இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.
- அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் பாபர் ஆசம்.
கராச்சி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் தனது 18-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 10 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்தார். மேலும் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
அகா சல்மான் 46 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மசூத் 44 ரன்னும் எடுத்தனர். மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 43.2 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி 4-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 60 ரன்னும், மார்க் சேப்மேன் 46 ரன்னும் எடுத்தனர். உஸ்மான் மிர் 4 விக்கெட்டும், முகமது ஹசிப் 3 விக்கெட்டும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.
இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நாளை நடக்கிறது.
- நியூசிலாந்து 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது.
- பாகிஸ்தான் 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து குணமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார்.
- முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
- சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 401 ரன்களைக் குவித்தது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். டேரில் மிட்செல் 29 ரன்னும், மார்க் சாப்மென் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினார். அவர் 25 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 401 ரன்களை குவித்துள்ளது.
இதையடுத்து, 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.